Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 74/100 கடும் பிணிகாள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 74/100 கடும் பிணிகாள்

    திரு வேங்கடத்து அந்தாதி 74/100 கடும் பிணிகாள் ! என்னை விட்டுக் கானகம் போம் !

    கானகமுண்டதிற்போமென்னினீங்கிக்கடும்பிணிகாள் !
    தேனகமுண்டகத்தாள்வேங்கடேசனைச்சென்றிரக்கும்
    போனகமுண்டுவெண்ணீற்றானயனொடும்பூமியோடும்
    வானகமுண்டபெருமானையின்றென்மனமுண்டதே



    பதவுரை : கானகம் + உண்டு தேன் + அகம் + முண்டக
    போனகம் + உண்டு
    வானகம் + உண்ட


    சென்று இரக்கும் போனக போய் யாசித்து உணவு கொண்டு ,
    முண்ட வெண்ணீற்றான் கபாலம் ஏந்தி , வெண்மையான விபூதி தரித்த சிவனோடும்
    அயனொடும் பிரமனோடும்
    பூமியோடும் வானகம் உண்ட பூமியையும் வானத்தையும் விழுங்கிய
    பெருமானை பெருமை உடையவனும்
    தேன் அக முண்டகத் தாள் தேன் உடைய மலர் போன்ற திருவடிகள் உடையவனுமான
    வேங்கடேசனை திருமலையப்பனை
    இன்று என் மனம் உண்டதே இப்பொழுது என் உள்ளம் உட்கொண்டது .
    கடும் பிணிகாள் கொடிய நோய்களே !
    என்னின் நீங்கி என்னை விட்டு விட்டு
    கானகம் உண்டு அதில் போம் காட்டிற்குச் செல்லுங்கள் !

    Last edited by sridharv1946; 20-08-13, 19:58.
Working...
X