Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 78/100 குருகினமே ! வேங்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 78/100 குருகினமே ! வேங்

    திரு வேங்கடத்து அந்தாதி 78/100 குருகினமே ! வேங்கடத்தான் முன் என் மயலைக் கழறுமின் !

    செவித்தலைவன்னியன் சூடுண்டவேயிசைதீப்பதும் யான்
    தவித்தலைவன்மயலும் தமர் காப்பும் தமிழ்க்கலியன்
    கவித்தலைவன் திருவேங்கடத்தான் முன் கழறுமின் - பொன்
    குவித்தலைவந்துந்து கோனேரி வாழும் குருகினமே



    பதவுரை : செவி + தலை + வன்னியன்
    தவித்து + அலை + வான்
    கவி + தலைவன்
    குவித்து + அலை + வந்து

    அலை பொன் குவித்து வந்து அலைகள் பொன்னைக் கொழித்துக் கொண்டு வந்து
    உந்து கோனேரி வாழும் குருகினமே மோதும் கோனேரியில் வாழும் நாரைக் கூட்டமே !
    வன்னியன் சூடு உண்ட வேய் நெருப்பில் சுட்ட மூங்கிலால் ஆன புல்லாங்குழலின்
    இசை தீப்பதும் இசை என் காதுகளைச் சுடுவதையும்
    யான் தவித்து அலை வன்மயலும் நான் உன் பிரிவினால் வருந்தும் வலிய மோஹத்தையும்
    தமர் காப்பும் உற்றார் பாதுகாக்கும் முறையையும்
    தமிழ்க் கலியன் கவித் தமிழ் மொழியில் தேர்ந்த திரு மங்கை ஆழ்வார் பாடிய பாடல்களுக்குத்
    தலைவன் திருவேங்கடத்தான் முன் தலைவன் ஆன திருமலையப்பன் முன்னே சென்று
    கழறுமின் சொல்லுங்கள்


    --
    V.Sridhar
Working...
X