Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 81/100 வேங்கடவா ! உன் தĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 81/100 வேங்கடவா ! உன் தĬ

    திரு வேங்கடத்து அந்தாதி 81/100 வேங்கடவா ! உன் திருவடியே சிந்திக்கும் காலம் எது ?

    வந்தித்திருக்குமறை போற்று வேங்கடவாண மல-
    ருந்தித்திருக்குஙுமமணிமார்ப வுள்வஞ்சனையும்
    புந்தித்திருக்கும் வெகுளியுங்காமமும் பொய்யும் விட்டுச்-
    சிந்தித்திருக்குமதெக்காலம் யானுன்றிருவடியே



    பதவுரை : வந்தித்து + இருக்கு
    உந்தி + திரு + குங்குமம்
    புந்தி + திருக்கும்
    சிந்தித்து + இருக்கும்

    இருக்கு மறை ருக் முதலிய வேதங்கள்
    வந்தித்துப் போற்று வணங்கித் துதிக்கும்
    வேங்கடவாண வேங்கட மலையில் இருப்பவனே !
    மலர் உந்தி திரு குங்குமம் நாபித்தாமரை , திருமகள் , குங்குமம்
    அணி மார்ப இவைகளை அணிந்த மார்பை உடையவனே !
    யான் உள் வஞ்சனையும் நான் மனத்தில் உள்ள வஞ்சனைகளையும்
    புந்தி திருக்கும் அறிவின் மாறுபாட்டையும்
    வெகுளியும் காமமும் கோபத்தையும் ஆசைகளையும்
    பொய்யும் விட்டு பொய்யையும் ஒழித்து
    உன் திருவடி சித்திக்கும் உனது திருவடிகளை தியானித்திருப்பது
    அது எக் காலம் எப்பொழுதோ ?


Working...
X