Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 82/100 பெரு வடிவு கொண்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 82/100 பெரு வடிவு கொண்

    திரு வேங்கடத்து அந்தாதி 82/100 பெரு வடிவு கொண்ட பெருமான் அடி பேர்ப்பது எப்படி ?

    திருவடிவைக்கபுடவி பற்றாது அண்டம் சென்னி முட்டும்
    கருவடிவைக்கக்கலந்து ஆற்றா எண்திக்கும் கடல் மண் கொள்வான் -
    பொருவடிவைக்கனல் ஆழிப்பிரான் புனல் ஆழி கட்டப்-
    பெருவடிவைக்கண்ட அப்பன் - எவ்வாறு அடி பேர்ப்பதுவே



    பதவுரை : திருவடி + வைக்க
    கரு + வடிவை + கலந்து
    பொரு + வடி + வை + கனல்
    பெரு + வடிவை + கண்ட

    பொரு வடி வை போர் செய்கின்ற தேர்ந்தடுத்த கூர்மையான
    கனல் ஆழிப்பிரான் அக்கினியைச் சொரியும் சக்ராயுதத்தை உடைய தலைவனும்
    ஆழி கட்ட சமுத்திரத்தை அணை கட்டிக் கடப்பதற்காக
    புனல் பெரு வடிவைக் கண்ட அப்பன் கடல் நீரை வற்றச் செய்தவனுமான வேங்கடமுடையான்
    திருவடி வைக்க திரிவிக்ரமாவதார காலத்தில் திருவடி வைக்க
    புடவி பற்றாது பூமி முழுவதும் இடம் போதாமல் போயிற்று .
    சென்னி அண்டம் முட்டும் தலை அண்ட கோளத்தின் மேல் முகட்டைத தொட்டது .
    கரு வடிவை கருமையான திருமேனி இருப்பதற்கு
    எண் திக்கும் கலந்து ஆற்றா எட்டு திக்குகளும் இடம் போதவில்லை .
    கடல் மண் கொள்வான் (இது இப்படி இருக்க) கடல் சூழ்ந்த பூமியை அளப்பதற்கு
    அடி பேர்ப்பது எவ்வாறு திருவடி எடுத்து வைப்பது எப்படி ?
    Last edited by sridharv1946; 22-08-13, 20:13.
Working...
X