Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 83/100 நும் தீது அற வேங

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 83/100 நும் தீது அற வேங

    திரு வேங்கடத்து அந்தாதி 83/100 நும் தீது அற வேங்கடவனைத் தேரும் !

    பேரானைக் கோட்டினைப் பேர்த்தானை வேங்கடம் பேணுந்துழாய்த்-
    தாரானைப் போதனைத் தந்தானை எந்தையைச் சாடிறப்பாய்ந்-

    தூரானை மேய்த்துப் புள்ளூர்ந்தானைப் பஞ்சவர்க்கு உய்த்து நின்ற
    தேரானை நான் மறை தேர்ந்தானைத் தேருநுந்தீதறுமே



    பதவுரை :
    பேர் + ஆனை

    தாரானை
    ஊர் + ஆனை
    தேரானை


    பேர் ஆனைக் குவலயாபீடம் என்னும் பெரிய யானையின்
    கோட்டினைப் பேர்த்தானைதந்தங்களைப் பெயர்த்து எடுத்தவனும் ,
    வேங்கடம் பேணும் வேங்கடமலையை விரும்பித தங்குமிடமாகக் கொண்டவனும் ,
    துழாய்த் தாரானை துளசி மாலை அணிந்தவனும் ,
    போதனைத் தந்தானை பிரமனைப் படைத்தவனும் ,
    எந்தையை எமது தலைவனும் ,
    சாடு இறப் பாய்ந்து சகடாசுரன் ஒழியும்படி தாவி உதைத்தவனும் ,
    ஊர் ஆனை மேய்த்தானை ஊரில் உள்ள பசுக்களை மேய்த்தவனும் ,
    புள் ஊர்ந்தானை கருடனை வாஹனமாக உடையவனும் ,
    பஞ்சவர்க்கு பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ஜுனனுக்கு
    உய்த்து நின்ற தேரானை தேரைச் செலுத்தியவனும் ,
    நால் மறை தேர்ந்தானை நான்கு வேதங்களாலும் ஆராயப்பட்டவனுமான வேங்கடவனை
    தேரும் அறிந்து துதியுங்கள் !
    நும் தீது அறும் உங்கள் துன்பங்கள் நீங்கும் !
    Last edited by sridharv1946; 22-08-13, 21:45.
Working...
X