Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 88/100 நான் ஞானம் பெற உ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 88/100 நான் ஞானம் பெற உ

    திரு வேங்கடத்து அந்தாதி 88/100 நான் ஞானம் பெற உன் பொற்றாள் இன்று என் உச்சி வைப்பாய் !

    நரகமடங்கலுஞ்சென்றெய்த்த பாவிக்கு நாரியர்மேல்
    விரகமடங்கமெய்ஞ்ஞானம்வெளிசெயவீடுபெற
    வுரகமடங்கநடித்தபொற்றாளின்றென்னுச்சிவைப்பாய்
    வரகமடங்கயலானாய் வடமலை மாதவனே



    பதவுரை :நரகம் + அடங்கலும்
    விரகம் + அடங்க
    உரகம் + மடங்க
    வர + கமடம் + கயல்

    வர கமடம் கயல் ஆனாய் சிறந்த ஆமையும் மீனுமாய் அவதரித்தவனே !
    வட மலை மாதவனே வேங்கட மலையில் இருக்கும் திருமாலே !
    நரகம் அடங்கலும் எல்லா நரகங்களிலும்
    சென்று எய்த்த பாவிக்கு போய் வருந்திய பாவியான எனக்கு

    நாரியர் மேல் விரகம் அடங்க பெண்கள் மேல் ஆசை நீங்கவும்
    மெய் ஞானம் வெளி செய தத்துவ ஞானம் தோன்றவும்
    வீடு பெற பரம பதம் கிடக்கவும்
    உரகம் மடங்க நடித்த காளியன் என்ற பாம்பு தலை மடங்கும்படி அதன் மேல் நடனம் செய்த
    பொன் தாள் அழகிய திருவடிகளை
    இன்று என் உச்சி வைப்பாய் இப்போது என் தலையின் மேல் வைத்து அருள்வாய் !
    Last edited by sridharv1946; 23-08-13, 21:31.
Working...
X