Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 90/100 வேங்கடவருக்கு &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 90/100 வேங்கடவருக்கு &

    திரு வேங்கடத்து அந்தாதி 90/100 வேங்கடவருக்கு என் உள்ளம் உலையில் அரக்கு !

    மலையினரக்கருடன்றெழுந்தாரென்று மாமறைனூற்-
    கலையினரக்கருடனிந்திராதியர்காட்டச்செய்யுங்-
    கொலையினரக்கருடனேறும் வேங்கடக்குன்றரென்றா-
    லுலையினரக்கருடந்திலரேனுமென்னுள்ளவர்க்கே

    பதவுரை : மலையின் +அரக்கர் + உடன்று
    கலையினர் + அக்கர் + உடன்
    கொலையினர் + அக் + கருடன்
    உலையின் + அரக்கு + அருள் + தந்திலர்

    மா மறை நூல் கலையினர் சிறந்த வேத சாஸ்திரங்களில் தேர்ந்த பிரம்மா
    அக்கர் உடன் எலும்பு மாலை தரித்த சிவனுடன்
    இந்திர ஆதியர் இந்திரன் முதலிய தேவர்கள்
    மலையின் அரக்கர் மலைகள் போல் ராக்கதர்கள்
    உடன்று எழுந்தார் என்று காட்ட உக்கிரம் கொண்டு ஓங்கினார்கள் என்று முறையிட
    செய்யும் கொலையினர் அவர்களை வதம் செய்த

    அக் கருடன் ஏறும் அந்த கருடன் மேல் ஏறி அருளும்
    வேங்கடக் குன்றர் என்றால் வேங்கடவன் என்று சொன்னால்
    அருள் தந்திலரேனும் எனக்கு அவர் கருணை புரியா விட்டாலும்
    என் உள் அவர்க்கே அவர் விஷயத்தில் என் உள்ளமானது
    உலையில் அரக்கு நெருப்பில் இட்ட மெழுகு போல் உருகும்
    Last edited by sridharv1946; 24-08-13, 13:41.
Working...
X