Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 94/100 வேங்கடவனை வணங்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 94/100 வேங்கடவனை வணங்&

    திரு வேங்கடத்து அந்தாதி 94/100 வேங்கடவனை வணங்கினால் இல்லை விசனமே !

    குன்றுகளத்தனையுங்கடறூரக்குவித்திலங்கை
    சென்றுகளத்தனைவோரையுமாய்த்துத்திருச்சரத்தா-
    லன்றுகளத்னையட்டானை யப்பனையாய்மகடோ-
    டுன்றுகளத்தனை யேத்தவல்லார்க்கில்லை துன்பங்களே




    பதவுரை :குன்றுகள் + அத்தனையும்

    சென்று + களத்து + அனைவோரையும்
    அன்று + களத்தனை (வஞ்சகனை )
    தோள் + துன்று + களத்தனை (கழுத்து)

    குன்றுகள் அத்தனையும் எல்லா மலைகளையும்
    கடல் தூரக் குவித்து கடல் தூர்ந்திடும்படி ஒன்று சேர்த்து
    இலங்கை சென்று இலங்கா புரியை அடைந்து
    களத்து அனைவோரையும் மாய்த்து போரில் எல்லா அரக்கர்களையும் கொன்று
    திருச் சரத்தால் உயர்ந்த பிரம்மாஸ்திரத்தால்
    அன்று களத்தனை அட்டானை வஞ்சகனான ராவணனைக் கொன்றவனும்
    ஆய் மகள் தோள் இடைப்பெண்ணான நப்பினையின் கைகளால்
    துன்று களத்தனை தழுவப்பட்ட கழுத்தினை உடையவனுமான்
    அப்பனை ஏத்த வல்லார்க்கு திரு வேங்கடமுடையானை வணங்குபவர்களுக்கு
    துன்பங்கள் இல்லை எந்தத் துயரும் வராது
    Last edited by sridharv1946; 27-08-13, 21:06.
Working...
X