Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 97/100 வேங்கடவா ! வைகுண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 97/100 வேங்கடவா ! வைகுண

    திரு வேங்கடத்து அந்தாதி 97/100 வேங்கடவா ! வைகுண்டம் தருவாய் !

    முற்றிலைப் பந்தைக் கழங்கைக் கொண்டு ஓடினை முன்னும் பின்னும்
    அற்றிலை தீமை அவை பொறுத்தோம் - தொல்லை ஆலின் இளங்-
    கற்றிலை மேல் துயில் வேங்கடவா ! இன்று உன் கால் மலரால்
    சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே



    பதவுரை : முற்று + இலை
    அற்று + இலை
    கற்று + இலை (தளிர்)
    சிறு + இல் + ஐ


    தொல்லை ஆலின் இளம் கன்று இலை மேல் முன்பு ஆலிலைத் தளிர் மேல்
    துயில் வேங்கடவா நித்திரை செய்த திரு வேங்கடமுடையானே !
    முற்றிலை பந்தை கழங்கை சிறு முறத்தையும் பந்தையும் கழற்காய்களையும்
    கொண்டு ஒடினாய் பறித்துக் கொண் டு ஓடினாய்
    பின்னும் தீமை அற்றிலை அதன் பின்பும் தீங்கு செய்ததை விடவில்லை
    அவை பொறுத்தோம் அவைகளை பொறுத்துக் கொண்டோம்
    இன்று உன் கால் மலரால் இப்போது உன் திருவடித் தாமரையால்
    சிற்றிலை தீர்த்ததற்கு சிறு மணல் வீட்டை கலைத்ததற்குப பதிலாக
    பெரு வீட்டினைச் செய்தருள் ஸ்ரீ வைகுண்டத்தைக் கொடுத்து அருள்வாயாக !
    Last edited by sridharv1946; 29-08-13, 11:24.
Working...
X