Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 100/100 திருமலையான் தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 100/100 திருமலையான் தி

    திரு வேங்கடத்து அந்தாதி 100/100 திருமலையான் திருவடியே எல்லாம் !

    கருமலையும் மருந்தும் கண்ணும் ஆவியும் காப்பும் அவன்
    தருமலையுந்தியப் பேரின்பவெள்ளமும் தாய் ததையும்
    வருமலையும் திருப்பாலாழியும் திருவைகுந்தமும்
    திருமலையும் உடையான் எனக்கு ஈந்த திருவடியே



    பதவுரை : கரு + மலையும்(அழியும்)
    தரும் + அலை + உந்திய
    வரு + மலையும் (மல்லை)
    திரு + மலையும் (மலை)

    வரு மலையும் திருப் பால் ஆழியும் பொருந்திய திருக் கடல் மல்லையும் திருப் பாற்கடலும்
    திரு வைகுந்தமும் திருமலையும் ஸ்ரீ வைகுண்டமும் வேங்கட மலையும்
    உடையான் இருப்பிடமாக உடையவன்
    எனக்கு ஈந்த திருவடியே எனக்கு அளித்த திருவடிகளே
    கரு மலையும் மருந்தும் பிறவி நோயை ஒழிக்கும் மருந்தும் ,
    கண்ணும் அருமையான கண்களும் ,
    ஆவியும் தாரகமான உயிரும் ,
    காப்பும் பாது காவலும்
    அவன் தரும் வைகுண்டத்தில் பெருமான் அளிக்கும்
    அலை உந்திய பேர் இன்ப வெள்ளமும் அலைகள் கொண்ட ஆனந்தப பெருக்கும்
    தாய் தந்தையும் ஆம் என்னைப் பெற்றவர்களும் ஆகும்

Working...
X