Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - சிறப்புப் பாயிரம் (முன்னு&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - சிறப்புப் பாயிரம் (முன்னு&

    3. அழகர் அந்தாதி - சிறப்புப் பாயிரம் (முன்னுரை )

    திருகவி மங்கை மணவாள வள்ளல் செந்தேன் றுளித்து
    முருகவிழ் தென் திருமாலிருஞ்சோலை மலை முகுந்தற்கு
    இருகவின் தாள்களில் சூடும் அந்தாதியின் ஈரைம்பதில்
    ஒருகவி கற்கினும் ஞானமும் வீடும் உதவிடுமே


    பதவுரை : திரு + கவி

    முருகு + அவிழ்
    இரு + கவின்
    ஒரு + கவி

    திருகவி மங்கை சிறந்த கவியானவரும் , திருமங்கையைச் சேர்ந்தவரும்
    மணவாள வள்ளல் வள்ளலும் ஆன அழகிய மணவாள தாசர்
    செந்தேன் துளித்து முருகு அவிழ் சிவந்த தேன் சிந்தும் , மணம் வீசும்
    தென் திரு மாலிருஞ்சோலை மலை அழகிய திருமாலிருஞ்சோலைமலையில் இருக்கும்
    முகுந்தற்கு இரு கவின் தாள்களில் சூடும் திருமாலுடைய அழகிய இரு திருவடிகளில்
    சூடும் அந்தாதியின் ஈரைந்தின் சாத்திய இந்த அழகர் அந்தாதியின் நூறு பாடல்களுள்
    ஒரு கவி கற்கினும் ஏதாவது ஒரு பாடலைப் படித்தாலும்
    ஞானமும் வீடும் உதவிடுமே ஞானத்தையும் வைகுண்டத்தையும் கொடுக்குமே
    Last edited by sridharv1946; 29-08-13, 21:30.
Working...
X