Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 001 / 100 மனமே ! மாலிருஞ்சோலை அழகன

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 001 / 100 மனமே ! மாலிருஞ்சோலை அழகன

    3. அழகர் அந்தாதி- 001 / 100 மனமே ! மாலிருஞ்சோலை அழகனை எப்போதும் நினை !

    நீர் ஆழி வண்ணனை பால் ஆழி நாதனை நின்மலனை
    சீர் ஆழி அம் கைத் திருமகள் கேள்வனை தெய்வப் புள் ஊர்
    கூர் ஆழி மாயனை மால் அலங்காரனை கொற்ற வெய்யோன்
    ஓர் ஆழித் தேர் மறைத்தானை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே !


    ஆழி - கடல்
    சீர் ஆழி - மோதிரம்
    கூர் ஆழி - சுதர்சனம்
    ஓர் ஆழி - சக்கரம்

    நெஞ்சமே என் மனமே !
    நீர் ஆழி வண்ணனை கடல் போன்ற நீல நிறம் கொண்டவனை ,
    பால் ஆழி நாதனை பாற்கடலில் பள்ளி கொண்ட தலைவனை ,
    நின்மலனை குற்றம் அற்றவனை ,
    சீர் ஆழி அம கை சிறந்தமோதிரம் அணிந்த அழகிய கைகளை உடைய
    திருமகள் கேள்வனை மகா லக்ஷ்மியின் கணவனை ,
    தெய்வப் புள் ஊர் சிறந்த கருடன் மேல் பவனி வருபவனை ,
    கூர் ஆழி மாயனை கூர்மையான சுதர்சனம் உடைய மாயங்கள் செய்பவனை ,
    மால் அலங்காரனைதிரு மாலிருஞ்சோலை அழகனை ,
    கொற்ற வெய்யோன் ஓர் ஆழித் தேர் வெற்றியுடைய சூரியனின் ஒற்றைச் சக்கரத் தேரை
    மறைத்தானை பாரதப்போரில் மறைத்தவனை
    எஞ்ஞான்றும் உரை எப்போதும் துதி செய்வாய் !

Working...
X