Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 007/100 விடைவெற்பின் வித்தகரே ! ĩ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 007/100 விடைவெற்பின் வித்தகரே ! ĩ

    3. அழகர் அந்தாதி- 007/100 விடைவெற்பின் வித்தகரே ! சரணம் தரவேண்டும் !


    கூடுகைக்குஞ்சரமத்தடியேற்குகே கொடியவஞ்சஞ்-
    சாடுகைக்குஞ்சரணந்தரவேண்டும் தடத்தழுந்தி
    வாடுகைக்குஞ்சரந்காத்தீர் விண்வாழ்கைக்கும் வாளரக்கர்
    வீ டுகைக்குஞ்சரந்கோத்தீர் விடைவெற்பின் வித்தகரே



    பதவுரை : கூடு + கைக்கும் + சரமத்து
    சாடுகைக்கு + உ
    ம் + சரணம்
    வாடு + கை + குஞ்சரம்
    வீடுகைக்கும் + சரம்

    தடத்து அழுந்தி வாடு தடாகத்தில் முதலையால் மூழ்கி வருந்திய
    கைக்குஞ்சரம் காத்தீர் யானையை பாதுகாத்தவரே !
    விண் வாழ்க்கைக்கும் தேவர்கள் வாழ்வதற்கும்
    வாள் அரக்கர் வீடுகைக்கும் கொடிய அரக்கர்கள் வீழ்வதற்கும்
    சரம் கோத்தீர் அம்புகளைத் தொடுத்தவரே !
    விடை வெற்பின் வித்தகரே ரிஷப கிரியான அழகர் மலையில் இருக்கும் ஞானசொரூபனே !
    கூடு கைக்கும் சரமத்து உடலை உயிர் வெறுத்து நீங்கும் கடைசி காலத்தில்
    அடியேற்கு அடியவனான எனக்கு
    கொடிய வஞ்சச் சாடு கொடுமையான வஞ்ச எண்ணங்களை
    உகைக்கும் சரணம் அழிக்கும் திருவடிகளை
    தரவேண்டும் தந்து அருள வேண்டும்
    Last edited by sridharv1946; 02-09-13, 13:35.
Working...
X