Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 008/100 அலங்காரர் நாமம் உரைத்து

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 008/100 அலங்காரர் நாமம் உரைத்து

    3. அழகர் அந்தாதி - 008/100 அலங்காரர் நாமம் உரைத்து ஏத்துமினே !

    வித்தகரும்பரரசு ஆனவனும் விதியும் கங்கை

    மத்தகரும்பரவும் அலங்காரர் மழை கொண்ட கார்
    ஒத்தகரும்பரஞ்சோதியர்நாமம் உரைத்து அன்னைமீர்
    இத்தகரும்பரதெய்வமும் கூத்தும் விட்டு ஏத்துமினே






    பதவுரை : வித்தகர் + உம்பர் +அரசு
    மத்தகரும் + பரவும்
    ஒத்த + கரும் + பரஞ்சோதியர்
    இத்தகரும் + பர + தெய்வமும்


    அன்னைமீர் தாய் மார்களே !
    இத் தகரும் பரதெய்வமும் இந்த ஆட்டுக்கடா பலியையும் , பிற தெய்வ வழிபாட்டையும்
    கூத்தும் விட்டு வெறியாட்டங்களையும் ஒழித்து
    உம்பர் அரசு ஆனவனும் விதியும் தேவ அரசனான இந்திரனும் , பிரமனும்
    கங்கை மத்தகரும் பரவும் கங்கையைத் தலையில் உடைய சிவனும் வணங்கும்
    கார் ஒத்த கரும் பரஞ்சோதியார் மேகம் போன்று கறுத்து , சிறந்த ஒளி கொண்டவரும்
    அலங்காரர் வித்தகர் அழகரும் ஆன ஞான சொரூபனின்
    நாமம் உரைத்து ஏத்துமினே பெயரைச் சொல்லித துதியுங்கள்




    Last edited by sridharv1946; 02-09-13, 19:59.
Working...
X