Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 009/100 கள்ளழகரை ஏத்துமின் ! கருĩ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 009/100 கள்ளழகரை ஏத்துமின் ! கருĩ

    3. அழகர் அந்தாதி- 009/100 கள்ளழகரை ஏத்துமின் ! கருணையுடன் காத்திடுவார் !

    ஏத்துமின்பத்தியினால் எட்டெழுத்தும் இணையடிக்கே
    சாத்துமின்பத்திரத்தண்ணம் துழாய் - மதிதாங்கி கஞ்சம்
    பூத்துமின்பத்திசெயும் பச்சை மாமுகில் போல் அழகர்
    காத்துமின்பத்தில் இருத்தியும் வைப்பர் கருணை செய்தே





    பதவுரை : ஏத்துமின் + பத்தியினால்
    சாத்துமின் + பத்திர
    பூத்து + மின் + பத்தி
    காத்தும் + இன்பத்தில்


    பத்தியினால் எட்டெழுத்தும் ஏத்துமின் பக்தியோடு அஷ்டாக்ஷரத்தை உச்சரியுங்கள்
    பத்திரத் தண் அம் துழாய் குளிர்ந்த அழகிய துளசி தளங்களை

    இணை அடிக்கே சாத்துமின் அப் பெருமானுடைய திருவடிகளில் சமர்ப்பியுங்கள்
    மதி தாங்கி கஞ்சம் பூத்து சந்திர மண்டலத்தை சுமந்து , தாமரை பூத்த
    மின் பத்தி செய்யும் மின்னல்கள் ஒழுங்காகத் தோன்றும்
    பச்சை மா முகில் போல் பசுமையான பெரிய மேகம் போன்ற திருமேனி உடைய
    அழகர் கருணை செய்தே காத்தும் அழகர் பெருமான் அருள் கூர்ந்து பாதுகாத்தும்
    இன்பத்தில் இருத்தியும்வைப்பார் மகிழ்ச்சி அளித்தும் வைகுண்டத்தில் வைப்பார்






    Last edited by sridharv1946; 02-09-13, 21:38.
Working...
X