Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 011/100 அழகா ! அருளாய் வாழ்க்கை ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 011/100 அழகா ! அருளாய் வாழ்க்கை ந

    3. அழகர் அந்தாதி- 011/100 அழகா ! அருளாய் வாழ்க்கை நிலை பெறவே !

    வினைக்குமருந்தரிக்கும் பிணி மூப்புக்கும் வீசுகின்றவே-
    தனைக்குமருந்தன்ன தாள் அழகா செய்ய தாமரையங்-
    கனைக்குமருந்தமுதே அருளாய் நின்னைக் காதலித்து
    நினைக்குமருந்ததி தன உயிர் வாழ்க்கை நிலை பெறவே



    பதவுரை : வினைக்கும் + மருந்து
    வேதனைக்கும் + மருந்து
    அங்கனைக்கும் + அருந்து
    நினைக்கும் + அருந்ததி

    வினைக்கும் நல வினை , தீ வினை
    மருந்து அரிக்கும் பிணி மூப்புக்கும் மருந்தை அழிக்கும் நோய் , முதுமை
    வீகின்ற வேதனைக்கும் மரண வேதனை ஆகிய எல்லாவற்றையும் போக்கவும் வல்ல
    மருந்து அன்ன தாள் அழகா தேவாமிருதம் போன்ற திருவடிகளை உடைய அழகா !
    செய்ய தாமரை அங்கனைக்கும் செந்தாமரையில் இருக்கும் மகா லக்ஷ்மிக்கும்
    அருந்து அமுதே பிரியமான அமிர்தம் போன்றவனே !
    நின்னைக் காதலித்து நினைக்கும் உன்னை விரும்பி நினைத்துள்ள
    அருந்ததிதன் உயிர் வாழ்க்கை அருந்ததி போன்ற இந்த பெண்ணின் உயிர் வாழ்வு
    நிலை பெற அருளாய் நிலை பெறும்படி கருணை செய்வாய் !

    Last edited by sridharv1946; 03-09-13, 12:48.
Working...
X