Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 015/100 பணிவீர் என் அழகனையே ! பாவ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 015/100 பணிவீர் என் அழகனையே ! பாவ

    3. அழகர் அந்தாதி- 015/100 பணிவீர் என் அழகனையே ! பாவம் வாராது !

    சேராதகாதநரகேழ் தலைமுறை சேர்ந்தவர்க்கும்
    வாராதகாதம் வசை பிணி பாவம் அறி கடன்முன்-
    றூராதகாதங்கடூர்த்தானை மாலிருஞ்சோலையிற்போ-
    யாராதகாதலுடன் பணிவீர் என் அழகனையே



    பதவுரை : சேரா + தகாத + நரகு
    வாராது + அகாதம்
    தூராத + காதங்க
    ள்
    ஆராத + காதலுடன்

    ஆராத காதலுடன் அளவில்லாத அன்புடன்
    மா
    லிருஞ்சோலை போய் திரு மாலிருஞ்சோலைக்குச் சென்று
    முன் மறி கடல் முன்பு ( ராமாவதார காலத்தில்) அலைகள் வீசும் கடலில்
    தூராத காதங்கள் தூர்த்தானை கட்ட முடியாத பல நீளம் அணை கட்டிய
    என் அழகனை பணிவீர் என் தலைவனாகிய அழகர் பிரானை வணங்குங்கள்
    ஏழ் தலை முறை சேர்ந்தவர்க்கும் ஏழு தலை முறைகளைச் சேர்ந்தவர்க்கும்
    தகாத நரகு சேரா தகுதியற்ற நரகங்கள் தொடராது
    அகாதம் வசை பிணி பாவம் வாராது ஆழமான பழிப்பும் நோயும் தீவினையும் நேரிடாது .



    Last edited by sridharv1946; 03-09-13, 21:41.
Working...
X