Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 018/100 அழகர் அடியார்க்கு இல்லை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 018/100 அழகர் அடியார்க்கு இல்லை

    3. அழகர் அந்தாதி- 018/100 அழகர் அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே !

    மருந்துவந்தார் தொழும் மாலிருஞ்சோலைமலை அழகர்
    "அருந்துவந்தாரணி" என்று அயின்றார் அடல் ஆயிர வாய்
    பொருந்துவந்தார் பணிப்பாயார் விதுரன் புது மனையில்
    விருந்துவந்தார் - அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே



    பதவுரை : மருந்து + உவந்தார்
    அருந்துவம் + தாரணி
    பொருந்து + வந்து + ஆர்
    விருந்து + வந்தார்


    அருந்துவம் தாரணி என்று அயின்றார் "பூமியை உண்போம்" என்று நினைத்து உண்டவரும்
    அடல் ஆயிர வாய்பொருந்து வலிமையுள்ளவரும் , ஆயிரம் வாய்கள் உடையவரும்
    வந்து ஆர் பணி காற்றை உணவாகக் கொள்பவருமான ஆதி சேஷன் எனும் பாம்பை
    பாயார் சயனம் ஆகக் கொண்டவரும்
    விதுரன் புது மனையில் விதுரனது புது மாளிகையில்
    விருந்து வந்தார் விருந்தினராக வந்தவரும் ,
    மருந்து உவந்தார் தொழும் அமிர்தம் விரும்பி உண்ட தேவர்கள் வணங்கும் ,
    மாலிருஞ்சோலை அழகர் திரு மாலிருஞ்சோலையில் இருக்கும் அழகருடைய
    அடியார்க்கு தொண்டர்களுக்கு
    நோயும் வெறுமையும் இல்லை பிணியும் தரித்திரமும் ஒரு நாளும் வராது .

    Last edited by sridharv1946; 04-09-13, 20:18.
Working...
X