Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 020/100 அலங்காரர் பொற்றாளை ஏத்த&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 020/100 அலங்காரர் பொற்றாளை ஏத்த&

    3. அழகர் அந்தாதி- 020/100 அலங்காரர் பொற்றாளை ஏத்துவது எப்போது ?

    செப்போதனம் செழுந்துப்போ செவ்வாய் என்று சேயிழையார்க்கு
    ஒப்போத நெஞ்சு உருகித் திரிவீர் ! கனல் ஊதை மண் விண்
    அப்போதனம் என்று அமுது செய்தார் அலங்காரர் பொற்றாள்
    எப்போதனந்தல் தவிர்ந்து ஏத்த நீங்கள் இருக்கின்றதே





    பதவுரை : செப்போ + தனம்
    ஒப்பு + ஓத
    அப்பு + ஓதனம்
    எப்போது + அனந்தல்


    தனம் செப்போ 'கொங்கைகள் பொற்கலசங்களோ ?
    செவ்வாய் செழும் துப்போ என்று சிவந்த வாய் செழுமையான பவளமோ ? ' என்று
    சேயிழையார்க்கு ஒப்பு ஓத ஆபரணம் அணிந்த பெண்களுக்கு உவமை சொல்வதில்
    நெஞ்சு உருகித் திரிவீர் மனம் நெகிழ்ந்து வீணே அலைபவர்களே !
    கனல் ஊதை மண் நெருப்பையும் , காற்றையும் , நிலத்தையும்
    விண் அப்பு ஓதனம் என்று வானத்தையும் , நீரையும் உணவு என்று பிரளய காலத்தில்
    அமுது செய்தார் அலங்காரர் உட்கொண்டவரான அழகருடைய
    பொற்றாள் அழகிய திருவடிகளை
    அனந்தல் தவிர்த்து தமோ குணம் நீங்கி
    நீங்கள் ஏத்த இருக்கின்றது எப்போது நீங்கள் எப்போது துதிப்பீர்கள் ?
    Last edited by sridharv1946; 05-09-13, 13:26.
Working...
X