Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 026/100 அழகன் சிவந்த கழல் இணை என்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 026/100 அழகன் சிவந்த கழல் இணை என்

    3. அழகர் அந்தாதி- 026/100 அழகன் சிவந்த கழல் இணை என்னை நாசம் அறப் பண்ணின !

    நண்ணினநாகமுடி மேல் நடித்து , என்னை நாசம் அறப்-
    பண்ணினநாகமும் பாரும் அளந்தன ; பண்டு தம்பி
    மண்ணினநாக வனம் போயின - வளர் சோலைமலைக்-
    கண்ணினநாகம் கரியான் சிவந்த கழல் இணையே



    பதவுரை : நண் + இன + நாக + முடி
    பண்ணின + நாகமும்
    மண்ணினன் + ஆக
    கண் + இனன் + ஆகம்

    வளர் சோலைமலைக் கண் இனன் வளர்ந்த சோலைமலையில் உதித்த சூரியன் போன்றவனும்
    ஆகம் கரியான் கருத்த திருமேனி கொண்டவனுமான அழகர் பிரானுடைய
    சிவந்த கழல் இணையே செந்நிறமுள்ள இரு திருவடிகள்
    நாக நண் இனன் கிருஷ்ணனாக , காளியன் எனும் பாம்பின்
    முடி மேல் நடித்து தலைகளின் மேல் நடனம் ஆடி
    என்னை நாசம் அறப் பண்ணின என்னை அழியாது வாழும்படி செய்தன ;
    நாகமும் பாரும் அளந்தன வாமனனாக , விண்ணையும் மண்ணையும் அளந்தன ;

    பண்டு தம்பி மண்ணினன் ஆக முன்பு ராமனாக , தம்பி பரதன் அரசன் ஆகுமாறு
    வனம் போயின வனவாசம் சென்றன .

    Last edited by sridharv1946; 06-09-13, 19:59.
Working...
X