Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 028/100 சிலரே சோலைமலை எம்பிராற்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 028/100 சிலரே சோலைமலை எம்பிராற்

    3. அழகர் அந்தாதி - 028/100 சிலரே சோலைமலை எம்பிராற்கு உள்ளம் காதலரே !

    தனத்துக்கராவிய வேல்விழிக்கு ஏக்கற்று தையலரால்
    தினந்துக்கராகித் திரிவார் பலர் ; சிலர் செங்கமல-
    வனத்துக்கராசலம் காத்தாற்கு சோலைமலையில் நின்ற
    கனத்துக்கராவணையார்க்கு எம்பிராற்கு உள்ளம் காதலரே



    பதவுரை : தனத்துக்கு + அராவிய
    தினம் + துக்கர் + ஆகி
    வனத்து + கராசலம்
    கணத்துக்கு + அரா



    தனத்துக்கு அராவிய வேல் விழிக்கு கொங்கைக்கும் , கூரிய வேல் போன்ற கண்களுக்கும்
    ஏக்கற்று தையலரலால் ஏங்கி , பெண்களால்
    தினம் துக்கர் ஆகி எந்நாளும் துன்பம் உடையவர்களாய்
    பலர் திரிவார் பலர் வீணே அலைவார்கள்
    சிலர் ஆனால் சிலரே
    செங்கமல வனத்து தாமரைகள் மலர்ந்த தடாகத்தில்
    கராசலம் காத்தாற்கு கஜேந்திரனைக் காப்பாற்றியவரும் ,
    சோலைமலையில் நின்ற திரு மாலிருஞ்சோலையில் நிற்பவரும் ,
    கனத்துக்கு கரிய மேகம் போன்ற நிறம் உடையவரும் ,

    அரா அணையாற்கு ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டவருமான
    எம்பிராற்கு உள்ளம் காதலரே எம்பிரானை மனத்தால் விரும்புவார்கள் .

    Last edited by sridharv1946; 07-09-13, 12:53.
Working...
X