Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 029/100 இட வெற்பா ! இன்னருள் செய்Ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 029/100 இட வெற்பா ! இன்னருள் செய்Ī

    3. அழகர் அந்தாதி - 029/100 இட வெற்பா ! இன்னருள் செய்தருளே !

    காதலைப்பத்தினி மேல் வைத்த நீசக் கரு நிருதன்
    மாதலைப்பத்தியை மண்ணில் இட்டாய் ! நின்னை வாழ்த்தும் தொண்டர்க்கு
    ஈதலைப்பத்தியைச் செய்வோர்கள் வாழும் இட வெற்பா !
    தீதலைப்பத்தியங்கித்திரிவேற்கு அருள் செய்தருளே



    பதவுரை : காதலை + பத்தினி
    மா + தலை + பத்தியை (
    வரிசையை)
    ஈதலை + பத்தியை (
    பக்தியை )
    தீது + அலைப்ப + தியங்கி



    காதலை தனது தீய ஆசையை
    பத்தினி மேல் வைத்த உனது மனைவியான சீதை மேல் வைத்த
    நீசக் கரு நிருதன் கீழான கரிய ராக்ஷஸனான ராவணனுடைய
    மா தலைப் பத்தியை பெரிய தலைகளின் வரிசையை
    மண்ணில் இட்டவனே வெட்டித் தரையில் தள்ளியவனே !
    நின்னை வாழ்த்தும் தொண்டர்க்கு உன்னை பக்தியால் வாழ்த்தும் உன் பக்தர்களுக்கு
    ஈதலைப் பத்தியை செய்வோர்கள் வேண்டியவைகளைக் கொடுத்து , பக்தியை செய்பவர்கள்
    வாழும் இட வெற்பா இனிது வசிக்கும் ரிஷப கிரியில் இருப்பவனே !
    தீது அலைப்பத் தியங்கி தீவினை வருத்துவதால் கலங்கி ,
    திரிவேற்கு அருள்செய்தருளே அலையும் எனக்குக் கருணை செய்வாயாக !


    Last edited by sridharv1946; 07-09-13, 13:33.
Working...
X