Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 030/100 இடப கிரி எய்தில் மூடரும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 030/100 இடப கிரி எய்தில் மூடரும்

    3. அழகர் அந்தாதி - 030/100 இடப கிரி எய்தில் , மூடரும் அன்றே , முக்தர் அன்றே ?

    அருடருமங்கை விடாது ஏத்தும் அன்பருக்கு அன்பர் ; எல்லில்

    இருடருமங்கை எறி ஆழியார் ; இசைக்கின்னரரும்
    கெருடருமங்கையரும் , வாழ் இடப கிரியில் கல்லா
    முருடருமங்கயல் எய்தில் , அன்றே , அவர் முத்தர் அன்றே



    பதவுரை : அருள் + தருமம் + கைவிடாது
    இருள் + தரும் + அம் + கை
    கெருடரும் + மங்கையரும்
    முருடரும் + அங்கு

    அருள் தருமம் கை விடாது கருணையையும் , அறத்தையும் விடாமல்
    ஏத்தும் அன்பருக்கு அன்பர் தம்மைத் துதிக்கும் அடியார்களிடம் அன்பை உடையவரும்
    எல்லில் இருள் தரும் பகலில் இருளை உண்டாக்கும்
    அம கை எறி ஆழியார் அழகிய கையால் எறிந்த சக்கரத்தை உடையவரும்
    இசைக் கின்னரரும் இசைபாடுவதில் வல்லவரான கின்னரர்களும்
    கெருடரும் மங்கையரும் கருடரும் , தேவ மாதர்களும்
    வாழ் இடப கிரியில் வாழும் திரு மாலிருஞ்சோலையில்
    கல்லா முருடரும் படிப்பு அறிவு இல்லாத மூடர்கள்
    அங்கு அயல் எய்தில் அருகில் வந்தாலும்
    அன்றே அவர் முத்தர் அன்றே அப்பொழுதே அவர்கள் முக்தர்கள் ஆவார் அன்றோ ?



    Last edited by sridharv1946; 07-09-13, 20:13.
Working...
X