Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 032/100 திருமாலிருஞ்சோலைப் பரம&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 032/100 திருமாலிருஞ்சோலைப் பரம&#

    3. அழகர் அந்தாதி - 032/100 திருமாலிருஞ்சோலைப் பரமரை எய்தற்குத் தேர் மனமே !

    பரந்தாமரை திருமாலிருஞ்சோலைப் பரமரை, கால்
    கரந்தாமரை அன்ன கார் நிறத்தாரை; கடல் கடக்கும்
    சரந்தாமரை திரி கான் போய் இலங்கைத் தலைவன் பத்துச்-
    சிரந்தாமரைக் கணத்து எய்தாரை, எய்தற்குத் தேர் மனமே





    பதவுரை : பரம் + தாமரை
    கரம் + தாமரை
    சரம் + தாம் + மரை
    சிரம் + தாம் + அரை


    மனமே என் நெஞ்சமே !
    பரம் தாமரை ஸ்ரீ வைகுண்டத்தை தன் இருப்பிடமாகக் கொண்டவரும் ,
    திருமாலிருஞ்சோலைப பரமரை சோலைமலையில் இருக்கும் தலைவரும் ,
    கால் கரம் தாமரை அன்ன திருவடிகளும் கைகளும் தாமரை போல் இருப்பவரும் ,
    கார் நிறத்தாரை கரிய மேகம் போன்ற நிறம் உடையவரும் ,
    தாம் மரை திரி கான் போய் தாவும் மான்கள் திரியும் காட்டில் நடந்து சென்று
    கடல் கடக்கும் சரம் கடல் அரசனை வென்ற அம்பினால்
    இலங்கைத் தலைவன் பத்து சிரம் இலங்கை அரசன் ராவணனுடைய பத்து தலைகளை
    தாம் அரைக்கணத்து எய்தாரை அரைக் கணத்தில் தாம் துணித்தவருமான அழகரை
    எய்தற்குத் தேர் சரண் அடைவதற்குத் துணிவு கொள்வாய் !



    Last edited by sridharv1946; 09-09-13, 13:10.
Working...
X