Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 039/100 மதி உடையோர் நெடு மால் நெĩ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 039/100 மதி உடையோர் நெடு மால் நெĩ

    3. அழகர் அந்தாதி - 039/100 மதி உடையோர் நெடு மால் நெஞ்சுக்கு உகப்பாய் நிற்பர் !

    தஞ்சந்தனம் என்று தேடி புல்லோர் , தையலார் கடைக்கண் ,
    வஞ்சந்தனம் கொள்ள வாளா இழப்பர் - மதி உடையோர் ,
    செஞ்சந்தனப் பொழில் மாலிருஞ்சோலைத் திரு நெடு மால்
    நெஞ்சந்தனக்கு உவப்பாக நல்கா நிற்பர் , நேர் படினே



    பதவுரை : தஞ்சம் + தனம் (செல்வம்)
    வஞ்சம் + தனம் (கொங்கை)
    செம் + சந்தன
    நெஞ்சம் + தனக்கு

    புல்லோர் சில அற்பர்கள்
    தனம் தஞ்சம் என்று தேடி செல்வமே பாதுகாப்பு என்று அதைத் தேடிச சம்பாதித்து ,
    தையலார் கடைக்கண் பெண்களுடைய கடைக்கண்களின்
    வஞ்சம் தனம் கொள்ள வஞ்சனையும் , கொங்கைகளின் பொலிவும் கவர்ந்து கொள்ள ,
    வாளா இழப்பர் வீணாக அந்த பொருளை இழந்து விடுவார்கள் .
    மதி உடையோர் நேர் படில் நல்ல அறிவு உடையவர்கள் பொருள் கிடைத்தால் ,
    செம் சந்தனப் பொழில் சூழ் சிவந்த சந்தன மரங்களின் சோலையை உடைய
    திரு மாலிருஞ்சோலை திரு மாலிருஞ்சோலையில் இருக்கும்
    திரு நெடு மால் நெஞ்சம் உவப்பாக திருமாலின் திருவுள்ளத்திற்குப் பிரியமாகும்படி
    நல்காநிற்பர் அப்பொருளை நன்கு உபயோகிப்பர்



    Last edited by sridharv1946; 11-09-13, 19:45.
Working...
X