Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 044/100 சுந்தரவல்லி மணாளன் வெற்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 044/100 சுந்தரவல்லி மணாளன் வெற்

    3. அழகர் அந்தாதி - 044/100 சுந்தரவல்லி மணாளன் வெற்பைச் சூழுமின் !

    வாழுமின் பங்கயச் சுந்தரவல்லி மணாளன் வெற்பைச்-

    சூழுமின் , பந்தித்த தொல்வினை தீர்ந்து உய்ய - தொங்கல் சுற்றும்

    தாழுமின் பஞ்சணை மேல் மடவார் தட மா முலைக்கே

    வீ ழுமின்பம் கருதி , துன்ப யோனியில் வீழ்பவரே !



    பதவுரை :

    வாழும் + மின்

    சூழுமின்

    தாழும் + இன்

    வீழும் + இன்பம்


    சுற்றும் தொங்கல் தாழும் ...............சுற்றிலும் பூ மாலைகள் தொங்க விடப்பட்ட

    இன் பஞ்சணை மேல் .....................இனிமையான பஞ்சு மெத்தையின் மேல்

    மடவார் தட மா முலைக்கே வீழும்...பெண்களின் பெரிய அழகிய தனங்களில் ஆசை வைத்து

    இன்பம் கருதி ................................சிற்றின்பத்தையே பெரிதாக நினைத்து

    துன்ப யோனியில் வீழ்பவரே ............துன்பம் தரும் பிறப்புப் படு குழியில் விழுபவர்களே !

    பந்தித்த தொல்வினை தீர்ந்து .........கட்டுப்படுத்தும் பழைய கருமங்கள் நீங்கி

    உய்ய............................................. நீங்கள் நன்கு வாழ்வதற்காக ,

    வாழும் மின் ....................................அழியாத மின்னல் போன்றவளும் ,

    பங்கயச் .........................................செந்தாமரையில் வாழ்பவளுமான ,

    சுந்தரவல்லி மணாளன் ...................சுந்தரவல்லியின் கணவன் ஆகிய அழகர் பிரானுடைய

    வெற்பைச் சூழுமின் .........................திருமாலிருஞ்சோலைமலையை வலம் வாருங்கள்



    Last edited by sridharv1946; 02-03-18, 16:02.
Working...
X