Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 049/100 சிலம்பாற்றில் நீராடினா&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 049/100 சிலம்பாற்றில் நீராடினா&#

    3. அழகர் அந்தாதி - 049/100 சிலம்பாற்றில் நீராடினால் நோய்கள் நீங்கும் !

    வினையாட்டியேன் கொண்ட வெம் காம நோய் வெறியாட்டினும் , இச்-
    சினையாட்டினும் தணியாது -அன்னைமீர் - செய்ய பூங்கமல
    மனையாட்டி நாயகன் மாலிருஞ்சோலை மலைச் சிலம்பாற்று
    எனையாட்டி வாரும் ; சொன்னேன் , எந்த நோயும் எனக்கு இல்லையே



    பதவுரை : வினை + ஆட்டியேன்
    சினை + ஆட்டினும்
    மனையாட்டி
    எனை + ஆட்டி

    அன்னைமீர்
    தாய் மார்களே !

    வினை ஆட்டியேன் கொண்ட தீவினைகளால் ஆட்டப்படுபவள் ஆகிய நான் அடைந்துள்ள
    வெம் காம நோய் கொடிய இந்த காதல் நோயானது
    வெறியாட்டினும் முருகன் விஷயமாக ஆவேசம் ஆடுவித்தலாலும் ,
    இச்சினை ஆட்டினும் தணியாது இந்த ஆட்டைப் பலி கொடுத்தலாலும் அடங்காது .
    செய்ய பூங்கமல மனையாட்டி நாயகன் சிவந்த மலரில் வாழும் திரு மகளின் கணவனுடைய
    மாலிருஞ்சோலை மலை திருமாலிருஞ்சோலை மலையில் உள்ள
    சிலம்பாற்று என்னை ஆட்டி வாரும் நூபுர கங்கையில் எனை நீராட்டுங்கள் .
    எந்த நோயும் எனக்கு இல்லையே எனது இந்த நோய் நீங்கி விடும் .
    சொன்னேன் உறுதியாகச் சொல்லிவிட்டேன்

    Last edited by sridharv1946; 14-09-13, 13:32.
Working...
X