Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 050/100 என் ஆவி அழகரிடமும் உடல் எ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 050/100 என் ஆவி அழகரிடமும் உடல் எ

    3. அழகர் அந்தாதி - 050/100 என் ஆவி அழகரிடமும் உடல் என்னிடமும் உள்ளது !


    எனக்காவியங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை சந்-
    தனக்காவியங்கும் தமரவண்டீர் ! சொல்லும் - தத்துவ நூல்
    கனக்காவியங்கவி , வல்லோர் புகழ் அலங்காரனுக்கு
    வனக்காவியங்கண்ணி மாமலரால் மணவாளனுக்கே



    பதவுரை : எனக்கு + ஆவி + அங்கும்
    தனக்கா + இயங்கும்
    கன + காவியம்
    வன + காவி + அம்


    சந்தனக்கா இயங்கும் சந்தன மரச் சோலைகளில் சஞ்சரிக்கும் ,
    தமர வண்டீர் ஓசையை உடைய வண்டுகளே !
    தத்துவ நூல் கனக் காவியம் தத்துவ சாஸ்திரங்களிலும் , பெரிய காவியங்களிலும்
    கவி வல்லோர் புகழ் கவி படுவதிலும் வல்லவர்களான ஆன்றோர்கள் புகழும்
    அலங்காரனுக்கு அழகர் பிரானும் ,
    வனக் காவி அம கண்ணி நீரில் உள்ள நீலோத்பல மலர் போன்ற அழகிய கண்களுடைய
    மாமலராள் சிறந்த தாமரை மலரில் இருக்கும் திருமகளின்
    மணவாளனுக்கே கணவனும் ஆகிய தலைவனிடம்
    எனக்கு ஆவி அங்கும் உடல் இங்கும் "என் உயிர் அவரிடமும் உடல் மட்டும் இங்குமாய்
    ஆகி இருப்பதை சொல்லும் இருக்கிற " செய்தியைக் கூறுங்கள் .

Working...
X