Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 054/100 அழகர் அடி புகழ்வாருக்கு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 054/100 அழகர் அடி புகழ்வாருக்கு

    3. அழகர் அந்தாதி - 054/100அழகர் அடி புகழ்வாருக்கு ஒப்பில்லை நவ கண்டத்தே !

    காப்பவனந்த மலரோனையும் கறைக்கண்டனையும்
    பூப்பவனந்தரம் போக்க வைப்பான் புனல் , பார் , விசும்பு
    தீப்பவனந்தரும் தெய்வ சிகாமணி சேவடியை
    நாப்பவனந்தப்புகழ் வார்க்கு ஒப்பில்லை நவகண்டத்தே



    பதவுரை : காப்பவன் + அந்த
    பூப்ப + அனந்தரம்
    தீ + பவனம் + தரும்
    நா + பவம் + நந்த

    காப்பவன் எல்லோரையும் தானே காப்பவனும் ,
    அந்த மலரோனையும் பூப்ப பிரமனைப் படைத்தல் தொழில் செய்யுமாறும் ,
    கறைக்கண்டனையும் அனந்தரம் போக்க நீலகண்டனை அழித்தல் தொழில் செய்யுமாறும் ,
    வைப்பான் நியமித்து வைப்பவனும் ,
    புனல் பார் விசும்பு தீ பவனம் நீர் , நிலம் , வானம் , நெருப்பு காற்று ஆகியவைகளைப்
    தரும் தெய்வ சிகாமணி படைத்த , தேவர்களின் சிறந்த ரத்தினம் போன்றவனுடைய
    சேவடியை சிவந்த திருவடிகளை ,
    பவம் நந்த
    தங்களது பிறப்பு அழியும்படி
    நா புகழ்வாருக்கு நாவினால் துதிக்கின்ற பக்தர்களுக்கு
    நவ கண்டத்தே ஒப்பு இல்லை ஒன்பது கண்டங்களிலும் நிகர் யாரும் இல்லை

    Last edited by sridharv1946; 16-09-13, 15:23.
Working...
X