Announcement

Collapse
No announcement yet.

துவாரபாலகர்கள் காட்டும் தத்துவம்.!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • துவாரபாலகர்கள் காட்டும் தத்துவம்.!

    துவாரபாலகர்கள் காட்டும் தத்துவம்.!

    Click image for larger version

Name:	Dwarabalaka.JPG
Views:	1
Size:	20.1 KB
ID:	35191


    தஞ்சாவூர் பெரிய கோவிலின் முகமண்டபத்து வாயிலில் உள்ள துவார பாலகர் சிலை காட்டும் தத்துவம் அற்புதமானது.துவாரபாலகரின் காலடியில் கிடக்கும் பாம்பு ஒன்று யானையை விழுங்குவதாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. யானையை விழுங்கும் பாம்பின் உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.


    பாம்பு சுற்றியிருக்கும் துவாரபாலகரின் கதாயுதத்தின் அளவை கற்பனை செய்துகொள்ளுங்கள்.
    கதாயுதத்தை காலில் அழுத்திக்கொண்டிருக்கும் துவாரபாலகரின் உருவம் எவ்வளவு பெரியதாக இருத்தல் வேண்டும்?

    அந்த துவாரபாலகரே "உள்ளே இருக்கும் ஈசனார் மிகப்பெரியவர்" என்று விஸ்மய முத்திரை காட்டுகிறார்.

    தர்ஜனி முத்திரையால் நம்மை எச்சரிக்கை செய்கிறார்.

    அபய முத்திரையால் ஈசன் கருணைமிக்கவர் என்று உணர்த்துகிறார்.

    பரமசிவனாகத் திகழும் பரம்பொருளின் பேராற்றலை சிற்பவாயிலாக உணர்த்தும் வடிவ அமைப்புதான் தஞ்சாவூர் பெரிய கோயிலின் துவாரபாலகர் சிலைகள்.

    ஆதாரம்:குடவாயில் பாலசுப்ரமணியனின் "தஞ்சாவூர்"
    தகவல்: மு.குருமூர்த்தி


    http://thanjavure.blogspot.com/2008/06/blog-post.html
Working...
X