Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 059/100 திருமால் திருவடிகள் தீய

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 059/100 திருமால் திருவடிகள் தீய

    3. அழகர் அந்தாதி - 059/100 திருமால் திருவடிகள் தீயவனைக் காக்குமோ ?
    காமத்தனை பொய் அழுக்காறு கோபம் களவு கொலை
    ஆமத்தனையும் உடையேனை ஆறும் கொல் - ஆன் பொருப்பு ஆம்
    தாமத்தனைவரும் போற்ற நின்றான் , பண்டு தாமரையோன்
    பூமத்தனைச் செய்த நோய் துடைத்தான் , அடிப்போதுகளே ?

    பதவுரை : காமத்தனை
    ஆம் + அத்தனையும்
    தாமத்து + அனைவரும்
    பூமத்தனை

    ஆன் பொருப்பு ஆம் தாமத்து ரிஷப கிரி எனும் இடத்தில்
    அனைவரும் போற்ற எல்லோரும் வணங்கும்படி நிற்பவனும் ,
    பண்டு தாமரையோன் முன்பு பிரமன்
    பூமத்தனைச் செய்த ஊமத்தம்பூவைச் சூடிய சிவனுக்கு செய்த
    நோய்துடைத்தான் துன்பத்தை தீர்த்தவனுமான அழகருடைய

    அடிப் போதுகள் திருவடித் தாமரைகள்
    காமத்தனை சிற்றின்ப ஆசையை உடையவனும் ,
    பொய் அழுக்காறு கோபம் களவு,பொய்யும், பொறாமையும், கோபமும், திருட்டுத்தனம்,
    கொலை ஆம் அத்தனையும் கொலைத் தொழில் ஆகிய அத்தனை தீமைகளையும்
    உடையேனை ஆறும் கொலோ உடையவனான என்னைப் பாதுகாக்குமோ ?


    Last edited by sridharv1946; 26-09-13, 13:26.
Working...
X