Announcement

Collapse
No announcement yet.

அம்மா...நீ இரங்காய் எனில், புகல் ஏது?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அம்மா...நீ இரங்காய் எனில், புகல் ஏது?

    அம்மா...நீ இரங்காய் எனில், புகல் ஏது?

    பலருக்கும் இந்தப் பாட்டு தெரியும்!

    புகழ்பெற்ற இந்தப் பாடலை இயற்றியவர்: பாபநாசம் சிவன் (தஞ்சை இராமையா)!

    தஞ்சைக்கு அருகில் உள்ள பாபநாசத்தில், ஒரு சிவன் கோயில்! உடல் முழுக்க திருநீறு பூசிக் கொண்டு, கோயிலில் போக்கற்று திரிந்த காலத்தில், இவர் பாடிக் கொண்டே இருப்பதைக் கண்டு, அவ்வூர் மக்கள்...

    நம்மூரு "பாபநாசத்தில் ஒரு சிவன்" போல இருக்கிறாரே என்று வியக்க...அதுவே நாளடைவில் "பாபநாசம் சிவன்" என்றே நிலைத்து விட்டது!

    கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல்கள் சொற்பமாக இருந்த காலத்திலே...
    தமிழ்ப் பாடல்களாக எழுதிக் குவித்த அண்ணல்! தமிழ்த் தியாகைய்யர் என்றும் போற்றுவார்கள்! 1973-இல் மறைந்தார்!
    தமிழிசை, மற்றும் தமிழ்மொழியில் கர்நாடக இசை...இரண்டுக்கும் பெருந்தொண்டு ஆற்றியவர் நம் பாபநாசம் சிவன்!

    நீ இரங்காயெனில் புகலேது - இந்தப் பாடலின் பின் ஒரு கதையும் உண்டு!

    இதை சினிமாவுக்காக எழுதிக் கொண்டு சென்றார் சிவன்! ஆனால் அந்த இசையமைப்பாளர் கண்டு கொள்ளவில்லை! மனமொடிந்த சிவன், இதை இராஜாஜி-யிடம் காண்பிக்க...

    அவர் அதை எம்.எஸ் அம்மாவிடம் காண்பிக்க, ஆழ்வார் பாசுரம் போலவே இருக்கே-ன்னு எம்.எஸ் அதை "ஹம்" பண்ணிக் காட்ட, அருகில் இருந்த பலரும் சொக்கிப் போய் விட்டார்கள்!

    பின்பு.....எம்.எஸ் அதை உருக உருகப் பாடி.....
    ஒரு மறுதலிக்கப்பட்ட பாடல்...
    ஏற்றுக்கொண்ட பாடலாகி...
    மேடை தோறும் மேடை தோறும்...


    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Qhvh1-l3kZw



    Source:Varagooran Narayanan
Working...
X