Announcement

Collapse
No announcement yet.

சிவபெருமானே!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிவபெருமானே!

    பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
    ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
    தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
    யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

    பால் நினைந்து ஊட்டும் - குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற

    தாயினும் சாலப் பரிந்து - தாயைவிட மிகவும் அன்பு கொண்டு

    நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய

    ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி

    உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் அறிவொளி பெருக்கி

    உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து - அழியாத இன்பமாகியத் தேனினைச் சொரிந்து

    புறம் புறம் திரிந்த செல்வமே - எல்லாப் புறங்களிலும் கூட வந்து என்னைக் காக்கும் செல்வமே!

    சிவபெருமானே - சிவபிரானே!

    யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து

    சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன்

    எங்கெழுந்தருளுவது இனியே - இனிமேல் நீ எங்கே எழுந்தருளிச் செல்வது?

    பசியை காலத்தால் அறிந்து பால் ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி உள்ளத்திலே அறிவொளி பெருக்கி அழியாத ஆனந்தத்தைப் பொழிந்தாய். உள்ளே ஆனந்தத்தைத் தந்ததோடு வெளியே எப்புறத்திலும் நின்று காத்தாய். எனது செல்வமே சிவபெருமானே! நான் உன்னை உறுதியாகப் பற்றினேன்! இனி எங்கே எழுந்தருளுகிறீர்?!



    Click image for larger version

Name:	Lord Shiva.jpg
Views:	1
Size:	31.0 KB
ID:	35268


    Source:Kumar Ramanathan
Working...
X