Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 072/100 பிறவித் தீது அழகர் அன்ற

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 072/100 பிறவித் தீது அழகர் அன்ற

    3. அழகர் அந்தாதி - 072/100 பிறவித் தீது அழகர் ன்றி எத்தேவராலும் தேறல் அரிதே !

    மாதவரால் உம்பரால் அறியார் , மதுரைப் பிறந்த
    யாதவரால் இலை மேல் துயின்றார் - இரும் தாழ் சுனையில்
    போதவரால் உகள் மாலிருஞ்சோலையில் போம் ! பிறவித்-
    தீதவரால் அன்றி எத்தேவராலும் தேறல் அரிதே




    பதவுரை : மா + தவரால்
    யாதவர் + ஆல்
    போத + வரால்
    தீது + அவரால்


    மா தவரால் பெருந்தவம் உடைய முனிவர்களாலும்
    உம்பரால் அறியார் தேவர்களாலும் அறிய முடியாதவரும் ,

    மதுரை பிறந்த யாதவர் வடமதுரையில் தோன்றிய யது குலத்தவரும் ,
    ஆல் இலை மேல் துயின்றார் ஆலிலை மேல் கண் வளர்ந்தவருமான அழகரின்
    இரும் தாழ் சுனையில் பெரிய ஆழ்ந்த சுனைகளில்
    போத வரால் உகள் மிகுதியாக வரால் மீன்கள் துள்ளும்
    மாலிருஞ்சோலையில் போம் திருமாலிருஞ்சோலையில் செல்லுங்கள் !
    அவரால் அன்றி அப்பெருமானால் அன்றி
    எத தேவராலும் வேறு எந்தத் தெய்வத்தாலும்
    பிறவித் தீது பிறப்புத் துன்பம்
    தேறல் அரிதே நீக்குவதற்கு முடியாது



    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 10-10-13, 20:54.
Working...
X