Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 076/100 ஆன் பொருப்பை வந்தித்தால&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 076/100 ஆன் பொருப்பை வந்தித்தால&

    3. அழகர் அந்தாதி -076/100 ஆன் பொருப்பை வந்தித்தால் , வைகுந்தம் சந்திக்கலாம் !

    சிந்திக்கலாரம் கொழிக்கும் திருச்சிலம்பாற்று அழகும்
    பந்திக்கலாப மயில் ஆடும் சாரலும் , பங்கயனோடு
    அந்திக்கலாமதியார்க்கு அரியார் உறை ஆன் பொருப்பும் ,
    வந்திக்கலாம் எனில் , சந்திக்கலாம் உயர் வைகுந்தமே

    பதவுரை : சிந்தி + கல் + ஆரம்
    பந்தி + கலாப
    அந்தி + கலா + மதியார்க்கு


    ஆரம் கல் சிந்திக் கொழிக்கும் முத்துகளையும் இரத்தினங்களையும் வீசி ஒதுக்கும்
    திருச்சிலம்பாற்று அழகும் சிறந்த நூபுர கங்கையின் அழகையும் ,
    பந்திக்கலாப மயில் ஆடும் வரிசையான தோகைகள் உடைய மயில்கள் கூத்தாடும்
    சாரலும் திரு மாலிருஞ்சோலையின் சாரலையும் ,
    பங்கயனோடு தாமரையில் தோன்றிய பிரமனுக்கும் ,
    அந்தி கலா மதியார்க்கு மாலைக் கலை உடைய பிறை சந்திரனை தரித்த சிவனுக்கும்
    அரியார் உணர்வதற்கு அரியவரான அழகர் பிரான்
    உறை ஆன் பொறுப்பும் இருக்கும் ரிஷப கிரி என்னும் திரு மாலிருஞ்சோலைமலையும்
    வந்திக்கலாம் எனில் வண
    ங்குதல் கூடுமாயின்
    உயர் வைகுந்தம் சந்திக்கலாம் உயர்ந்த பரம பதத்தை அடையலாம்




    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 13-10-13, 21:10.
Working...
X