Announcement

Collapse
No announcement yet.

மனிதனின் கடன்கள்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனிதனின் கடன்கள்.

    மனிதனின் கடன்கள்.
    இந்த சரீரத்தை போஷித்து வளர்த்த மாதா பிதாகளுக்கு நாம் கடன் பட்டவர்கள். நமது பாப புண்ணிய கணக்குகளை கவனித்து நமக்கும் நல்லது கெட்டதுகளை நிர்வஹிக்கும் தேவதைகளுக்கு நாம் வரி கட்ட வேண்டிய கடன்காரர்கள்.

    நமக்கு பல வழிகளிலும் உபகாரமாக இருந்து உதவும் பஞ்ச பூதங்களுக்கும் நாம் கடன்காரர்கள். இந்த ஜீவனுக்கு இந்த சரீரம் கடனாக கொடுக்க பட்டிருக்கிறது. இந்த ஜீவனாவது இந்த சரீரத்தின் உதவியால் கர்மபந்தங்களை அறுக்க வேண்டும்.

    பாபங்களை போக்கி கொள்ள வேன்டும். அதற்காகத்தான் இந்த சரீரத்தை கடனாக கொடுதிருக்கிறார். நம்மை சுற்றி கடன் மயம். கடனை அடைக்காமல் இருந்தால் கடன் எப்படி தீரும்.

    ஒரு தொழிலதிபர் வங்கியில் கடன் வாங்குவது போல் நாம் கடன் வாங்கி வந்து பிறந்து இருக்கிறோம். வங்கி கடனை திருப்பி தராமல் தொழில் அதிபர் தப்பிக்க முடியாது.

    இது போல் தான் நாமும் தெய்வதிற்கும், பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் தேவதைகள் ஞாபக படுத்துவார்கள், தண்டனையும் கொடுப்பார்கள். கோச்சார ரீதியாக நவகிரகங்கள் ஞாபக படுத்தும்.


    குழந்தைகள் உடல் நிலை பாதிக்க படும். ஆபிசில் ப்ரச்சனைகள், , மன கலக்கம், பயம், மனைவியுடன் கோபம், மனஸ்தாபம், படிப்பில் ப்ரச்னை, குழந்தை பிறக்காமல் இருப்பது, பெண்கள் திருமண தாமதம், தேவையில்லாத வெறுப்புகளுக்கு ஆளாவது, சோக ஸம்பங்கள் நிகழ்வது, இம்மாதிரி தொந்தரவு கொடுத்து ஞாபக படுத்தும்..

    வேதங்களும் ரிஷிகளும் இதை இம்மாதிரி செய்தால் தான் கர்ம பந்தம் போகும், கடன் தீரும் என்று சொல்வதை கேளாமல், பஜனை., கீர்த்தனை, நவகிரஹ ஹோமம், , மந்த்ர தந்திர ஹோமம், தானம், பூஜை செய்வதால் ப்ரயோஜனமில்லை.

    நாம் நம் நித்ய கர்மாக்களை செய்து கொண்டிருந்தால் இவை எதுவும் செய்ய வேண்டாம். அதாவது தொழிலதிபர் தவறாது மாத தவணை கட்டி கொண்டிருந்தால் வங்கி அதிபரை காக்காய் பிடிக்க வேண்டாம்

    . மறுபடியும் இரண்டு வருடம் கழித்து வங்கி கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது மாத தவணை சரியாக கட்டியதால் உடனே கடனும் வங்கியில் கிடைக்கும். இல்லாவிட்டல் வங்கி கடன் கிடைக்காது. இதே போல் தான் தேவதைகள் விஷயமும். ஆபத்து வரும் போது ஜோசியரிடம் ஓடுவதும், பரிகாரம் செய்வதும் ப்ரயோஜனமில்லை.

    ப்ரதி பலன் எதிர்பாராத பக்தி தான் மோக்ஷத்தை கொடுக்கும். பூர்ணமான சித்த சுத்தியுடன் கூடிய ஞானம் தான் மோக்ஷம் கொடுக்கும் .நித்ய கர்மாகள் தான் நமக்கு தேவையான இஷ்டங்களயும், பூர்த்தி செய்து கொண்டே மோக்ஷத்தை நோக்கி அழைத்து செல்லும். பகவான் கீதையிலும் இந்த கர்ம மார்கத்தைதான் உபதேசிக்கிறார்.

    தேவ ருணங்கள் தீர யாக யக்யங்கள் செய்ய வேண்டும். ரிஷிகள் அதற்கான வழி முறைகளை கண்டு பிடித்து கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு ராயல்டி செலுத்த வேண்டும். அதற்காக வேதம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்யயனம் செய்ய வேண்டும்.

    தேவ ருணம் தீர யாகங்கள் செய்ய வேண்டும். யாகங்கள் செய்பவர்களுக்கு உதவி செய்யலாம். வேதம் படிப்பவர்களுக்கும், வேதம் சொல்லி கொடுக்கும் உபாத்யாயர்களுக்கு உதவி செய்து அந்த தர்மத்தை செழிப்பாக்கலாம்.

    பித்ருக்களுக்கு நாம் பட்ட கடனை நாம் தான் ச்ராத்தாதிகளை சிரத்தையுடன் செய்து அவர்களை த்ருப்தி செய்ய வேண்டும். பித்ரு கடனை அடைக்க வேண்டும். வேதத்தையும் , மின்சாரத்தையும் சம்பந்த படுத்தி பார்க்கலாம். மின்சாரம் இல்லாவிட்டால் எப்படி அவதி படுகிறோம். மின்சாரம் வந்ததும் எவ்வளவு சந்தோஷ படுகிறோம்.

    இதே மாதிரி தான் வேதமும் மனதிற்கும், சரீரத்திற்கும் சுகத்தை கொடுக்கிறது. வேதம் தடைப்பட்டுள்ளதால் மனத்தாலும் சரீரத்திலும் கஷ்டங்கள் வருகிறது. இந்த காரணம் புரியாமல் குழம்பி கொண்டிருக்கிறோம்.

    இனி பிறக்காமலிருக்க என்ன செய்வது என்பதற்கு காமகோடி மஹா பெரியவர் சொன்ன பதில்: நாம் ஏதோ தப்பு பண்ணி இருக்கிறோம்.


    அதற்கு தண்டனையாக இந்த பிறப்பு ஏற்பட்டிருக்கிறது. பற்று என்று இருப்பதால் தான் தப்பு செய்கிறோம். . இதற்கு அடிப்படை ஆசை.
    ஆசைக்கு காரணம் நம்மை தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் ஆசை ஏற்படுகிறது.

    ஒரு மாடு கண்ணாடியில் தன்னை பார்த்து விட்டு இன்னொரு மாடு என்று நினைத்து முட்ட போகிறது. மனிதன் தன் ப்ரதிபிம்பம் தான் என அறிந்து கொள்கிறான். இப்படியாக நாம் பார்க்கும் எல்லாம் ஒன்று தான். இரண்டு என்று எண்ணினால் ஆசை வரும். கோபம், பாபம் மறு பிறவி வருகிறது.

    எல்லாம் ஒன்று என்ற ஞானத்தை எப்படி பெறுவது. அம்மா உடம்புக்கு பால் கொடுப்பாள். அம்பிகை அறிவு ஞானப்பால் கொடுப்பாள். அம்பாளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்.

    நம் உடம்பிலேயே அம்பிகை குண்டலினி சக்தியாக இருக்கிறாள். அவளை அறிந்து விட்டால் சதா பேரின்பம் தான்.

    சித்தம் என்பது பெரிய சமுத்திரம். அதில் எண்ணங்கள் என்ற பல அலைகள் எழும்பி அமிங்கி போகின்றன. இந்த எண்ணங்களின் தழும்புகள் சித்தத்தில் பதிவாகி விடுகின்றன

    . இம்மாதிரி எண்ண அலைகள் எழுந்த வண்ணம் இருப்பதால் தான் சித்தம் கலங்கி தவிக்கிறது. பூர்வ ஜன்ம வாசனை, ஸம்ஸ்காரம் இவைகளால் ஏற்படும் வ்ருத்திகளே சித்தத்தில் பதிகின்றன..

    நம் ஸனாதன தர்மத்தின் அடிப்படை கொள்கை முன் ஜன்மம் மறு ஜன்மம் உண்டு என்பதே.. ஜீவாத்மா இந்த உலகில் பல பிறப்புகளை எடுக்கிறான். ஆத்மாவிற்கு பல சரீரங்கள் உன்டு.

    இவ்விதம் எடுக்கும் பல சரீரங்களுக்கும் ஒரு பொது விதி முறை உண்டு. அதாவது ஒரு பிறப்பில் அவன் செய்த கர்மாக்களுக்கு ஏற்றப்படி அவற்றுக்கு தக்க சரீரத்தை மறு பிறவியில் எடுக்கிறான்.

    கீதையும் பிறவி உண்டு என்கிறது. ..குழந்தை பிறந்ததும் பால் குடிக்க வேண்டும் என்று தெரிவது ஜன்மாந்திர வாஸனையினால் ஏற்பட்டதே.

    சிலருக்கு யாதொரு போதனையோ காரணமோ இல்லாமல் இயற்கையாகவே சில சக்திகள் உண்டாவதற்கு காரணம் ஜன்மாந்திர வாஸனையே. இன்று பொல்லாதவன் நாளை சாதுவாகவும், இன்று சாதுவானவன் நாளை பொல்லாதவனாகவும் மாறுவதும் ஜன்மாந்தர வாசனையே..

    வாசனையின் முட்டையாக உள்ள உட்கருவின் மேற்பரப்பில் , மனமாக தொழில் படுகையில் அடுத்தடுத்து வரும் வாசனைகள் ஒரு வகையான நியதிக்கு உட்பட்டிருக்கிறது..

    புதிய மோதுதல்களால் பழய வாசனைகள் மாற்றம் அடைவதற்கும் இப்பொது தொழில் பட தொடங்கியுள்ள பழைய வாசனையின் பலமே காரணமாக உள்ளது.

    காமத்தினால் கோபிகைகளும், நட்பினால் பாண்டவர்களும் பகைமையாக சிசுபாலனும் , பழி வாங்கும் உறவினால் ஹிரண்ய கசிபுவும், பயத்தினால் கம்சனும், உறவினால் வ்ருஷ்ணிகளும், பக்தியினால் நாரதாதிகளும் சாவா பெறு நிலை பெற்றனர் என பாகவதம் கூறுகிறது.

    இவர்கள் நிலை யோகம் என்று கூறப்படுகிறது.

    “”நான்”” என்ற எண்ண மில்லாமை.. தாமரை தண்ணிரில் இருந்தாலும் தண்ணீர் தாமரையில் ஒட்டாமல் இருக்கிறது.

    அந்த திடமான வாசனையில் தோய்வுராத நிலையில்லவர்கள் உள்ளம் இருந்திருக்க வேண்டும்… மனதை கட்டுபடுத்தி ஒரு நிலை படுத்த வேண்டும்.. இதன் மூலம் சித்ததில் எண்ண அலைகள் எழும்போது , மனம் ஏகாக்கிற நிலை அடைந்து சாந்தமாக இருக்கும்.

    க்ருஷ்ண யஜுர் வேதத்தில் யோக குன்டலினி உபனிஷத் என்று இருக்கிறது.
    .
    மனதின் ஒரு அம்சமான சித்த்தை பற்றி விரிவாக விளக்குகிறது. ப்ராணனும்
    வாசனைகளும் தான் சித்த்த்தை செயல் படுத்துகிறது. ஒன்றை கட்டு படுத்தினால் மற்றொன்றும் தானே கட்டுபடும்.. இது மூன்று வழிகளை காட்டுகிறது. 1. மிதமான ஆகாரம். 2, ஆசனம். 3. சக்தி சலனம்.

    தொடரும்.

  • #2
    Re: மனிதனின் கடன்கள்.

    1. மிதாகாரம்: மிதமான ஆகாரம். சத்துள்ள சத்துணவு, கட்டியான உணவும் திரவ உனவும் சரி சம்மாக இருக்க வேண்டும். பட்டினியும் கூடாது. பெருந்தீனியும் கூடாது. வயிற்றின் ஒரு பாகம் காலியாகவே இருக்க வேன்டும்.
    2 ஆசனம்: பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் நல்லது.

    3 சக்தி சலனம்: ப்ராணாயாமத்தின் மூலம் வயிற்று தசையை இப்படியும் அப்படியும் அசைப்பதன் மூலம் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யலாம்.;ஆசன வாயை இறுக்கி அபான வாயுவை மேலே ஏற செய்ய வேண்டும்.

    தேவி ஆகமங்களில் அம்பிகை ஒன்பது விதங்களாக ப்ரசன்ன மாக இருக்கிறாள் என்று கூறப்பட்டுள்ளது. குன்டலினிக்கு புஜங்கி என்ற பெயருமுண்டு.

    1. காலத்தொகுதி: வினாடி முதல் யுகம் வரை காலமாக வ்யாபித்துள்ளவள். இதில் சூரியன், சந்த்திரன் அடக்கம்.
    2. குலத்தொகுதி: உருவமாகவும் வர்ணமாகவும் இருப்பவள்.

    3. நாமத்தொகுதி: ஆயிரக்கணக்கான் நாமங்களில் உறைபவள்
    4. ஞானத்தொகுதி;அறிவாக விளங்குபவள். சதா மாறிக்கொண்டே இருக்கும் அறிவாகவும்,.மாறாமல் ஒரே நிலையில் உள்ள அறிவாகவும் இருப்பவள்.

    5. சித்த தொகுதி: சித்தம், புத்தி, மனசு, அஹங்காரமாகவும் விளங்குபவள்.
    6. நாத தொகுதி: பரா, பச்யந்தி, மத்யமா, வைகரியாகவும் விளங்குபவள்.
    7. பிந்து தொகுதி: ஆறு ஆதாரங்களாகவும் குன்டலினியாகவும் விளங்குபவள்.

    8. கலா தொகுதி: 51 மாத்ருகா அக்ஷரங்களாகவும் விளங்குபவள்.
    9. ஜீவர்கள் சுதாகுதி: எல்லா ஜீவன்களிலும் உறைபவள்..
    குண்டலினி வழிபாட்டில் அம்பிகையின் இந்த ஒன்பது வித ஸான்னித்யமும் இடம் பெறுகிறது.

    மனத்தினை கட்டுப்படுத்துவதால் மனிதன் ஒரு போதும் அழியாததும் தன்னியற்கையிலே நித்ய சுத்தமானதும் பூரணமானதுமான ஒரு பொருளை நேர் முகமாக காண்பான்..கவலைகள் அச்சத்தினாலும், நிறைவு பெறாத இச்சையினாலும் உண்டாகின்றன. . பூரண மான ஆனந்தம் உண்டாகின்றது.

    சாந்தி ஏற்பட்டால் தான் நிரந்திர சுகம் ஏற்படும். இன்பம் இரு கூற்களாக வுருணிக்கப்படுகிறது. ஒன்று சித். மற்றொன்று ஜடம். இந்த இரண்டின் உண்மை நிலைகளை அறிய வேண்டும்.

    உடல் ,பொறி, மன, அறிவு, தூக்க, மயக்க இன்பங்கள் வந்து போக கூடியவை.
    உண்மை இன்பம் புதிதாக வருவதில்லை. வந்த பொருள் போவது போல் உண்மை இன்பம் போவதில்லை.

    உண்மை உணர்வில் வாழ்பவனுக்கு மனம் இல்லை. மன உணர்வில் வாழ்பவனுக்கு உண்மை உணர்வு வாழ்வு இல்லை. அந்தகரணத்தின் பகுதிகள்: மனம், புத்தி, சித்தம், அஹங்காரம். ஆற்று வெள்ளத்தில் எல்லா இடத்திலும் நீர் இருப்பது போல் உட்கருவின் எப்பகுதியும் நான் என்ற முணைப்புணர்வு இருக்கிறது. இது தான் அஹங்காரம்.

    . இந்த இடத்தில் நான் என்கின்ற உண்ர்வு மட்டுமே அஹங்காரம் எனப்படுகிறது.. தண்ணீரில் ஜல வாயுவும், ப்ராண வாயுவும் கலந்தது. ஆனால் உட்கருவின் ஸ்வரூபமான அஹங்காரம் பல கோடி மூட்டைகளின் வாஸனையாகும்.

    எல்லா வாஸனைகளும் எப்போதும் உருப்பெறுவதோ தொழில் படுவதோ இல்லை. உருப்பெறாத கரு நிலையிலுள்ள வாசனைகள் கணக்கில்லாதது. இதுவே சித்தம்.

    உண்மை உணர்வு அமைதி வடிவானது. அஹங்காரத்திலும் அமைதியுள்ள , அமைதியற்ற என்ற நிலைகள் உண்டு. குரங்கு சேஷ்டை செய்யாமல் இருந்தாலும் குரங்கு குரங்கு தான்..

    உண்மை உணர்வு என்பது அமைதியின் ஒரு நிலை அல்ல. அமைதியின் வடிவு.

    தன் வம்ச வ்ருத்திக்காக மனிதன் சிற்றின்பத்தை அனுபவிக்க வேன்டியது தான். அதிலேயே மூழ்காமல் பேரின்பத்தை நாட முயல வேன்டும். பேரின்பத்தின் ருசி சிறிது உணர்ந்து விட்டால் பின்னர் மனம் சிற்றின்பத்தை நாடாது.

    முக்கனிகள்=மா, பலா, வாழை. மூன்றும் இனிப்பு சுவை தான். இந்த இனிப்பு சுவையிலும் வித்யாசம் உள்ளதை விவரிக்க முடியாது. சாப்பிட்டு பார்த்தால் தான் உணர முடியும்..

    எதுவோ ஒன்றை விட்டுவிட்டால் அதுவே யோகம் என்கிறார் கண்ணன் கீதையில் . அந்த ஒன்று தான் துக்கம். .இந்த ஜீவாத்மாவிற்கு பரமாத்மாவை பிரிந்திருக்கிர வறை துக்கம் தான்.

    புலன்களுக்கு இன்பமூட்டுபவை எவையோ அவைதான் துன்பத்திற்கு காரணம்.என்கிறார் கண்ணபிரான் கீதையில்.இக லோகத்து மகிழ்ச்சி எல்லாம் மாசுடையது என்பதை மனதில் இருத்தி கொள்ள வேண்டும். . மாசுடைய இன்பம் என்றாலும் துன்பம் என்றாலும் ஒன்று தான். உலகியல் இன்பத்தை பெரிதாக கருதாமல் குறை பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். .

    சித்தம் பேதலித்து கொண்டிருப்பதால் தான் இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. சித்தத்தை சஞ்சலிக்காமல் நிறுத்தி விட வேண்டும்.. இதற்காக சுவாச பந்தம் செய்ய வேண்டாம். துறவு வேண்டாம். துறவற மனப்பான்மை அவச்யம் தேவை..

    சித்தத்தை நேராக அடக்க வேன்டாம். அது திமிறி கொண்டு பாயும்.. சித்தத்தில் கவனம் வைக்காமல் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தில் நாம் பூரணமாக ஈடுபட தொடங்கினால் சித்தம் அழுக்கு படாமல் இருக்கும். சித்தத்துக்கு சஞ்சலிக்கும் வாய்ப்பும் குறையும்..

    பிறவிகளில் மானுட பிறவி யில் தான் மோக்ஷமடைய முடியும். இந்த மோக்ஷம் பெற நிரந்திர ஆனந்த நிலை அடைய வேண்டும். இதற்கு குண்டலினி யோகம் உதவுகிறது...

    மலைகளில் பொழிந்த மழை தண்ணீர் வெகு வேகமாக செடிகளையும். கற்களையும் பிறட்டி தள்ளிக்கொன்டு சப்தத்துடனும் கீழே வருகிறது. இதே தண்ணீர் சமுத்திரத்தை நெருங்கும் போது அமைதியாக மெதுவாக சப்தமில்லாமல் செல்கிறது..

    இதே மாதிரி தான் ஜீவாத்மாவும் பரமாத்மா விலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் போது தமோ , ரஜோ குணங்கள் கூடியதாக இருக்கிறது. பரமாத்மா அருகில் ஜீவாத்மா வந்து விட்டால் ஸாத்வீக குணங்கள் அதிக மாகி சாந்த மடைகிறது..

    Comment


    • #3
      Re: மனிதனின் கடன்கள்.

      மனித சரீரத்தை பிண்டாண்டம் என்றும் வெளியிலிருக்கும் பிரபஞ்சத்தை ப்ரும்மாண்டம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்படி வேறாக கூறப்பட்ட போதிலும் பிருமாண்டத்திலுள்ள தெல்லாம் பிண்டாண்டத்திலும் உண்டு.இந்த மனித சரீரத்தை க்ஷுத்ர பிருமாண்டம் என்பார்கள்.

      ஜீவாத்மா , பரமாத்மா அம்சமாக விளங்குவது போல , பராசக்தியின் அம்சமாக நம் உடலில் குண்டலினி சக்தி இருக்கிறது. .

      இந்த சக்தி தான் சகல சரீர சம்பந்தமான காரியங்களுக்கு காரணமாக இருக்கிறது. இச்சா, க்ரியா, ஞான என்று மூவகைப்பட்டது சக்தி ஸ்வரூபம். இத்தகைய சக்தியான குண்டலியான சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களின் வழியாக செலுத்தி சகஸ்ராரத்திலுள்ள சிவத்துடன் ஐக்கியம் செய்வதே சிவ சக்தி ஐக்யம்= மோக்ஷம்..

      அகண்டமான ப்ருத்வியில் (திரோதானம்) பிறப்பு (சிருஷ்டி) வளர்ப்பு (ஸ்திதி) இறப்பு (ஸம்ஹாரம்) இம்மூன்றும் முடிந்து அகண்ட வெளியான ஆகாயத்தில் (அருளல்) லயமாகிறது.

      இதை எல்லாம் செய்வது ஒரு சக்தி.இந்த சக்தி நம் உள்ளேயே உறைகிறது. இதை நாம் அறிய முற்பட வேண்டும்.

      பிருஹதாரண்ய உபநிஷத் அனைத்தையும் விட ஆன்மாவே இனிமையுடையது, அருமையுடையது என்கிறது .திருநாவுகரசருமிதையே சொல்கிறார்.

      கடோபனிஷத் சொல்கிறது :ஐம்புலன்களும் அடங்கி மனதிலே அமைதி நிலவி அறிவு ஒரு முனைப்பட்டு இருக்கும் போது ஆன்ம ஒளி தெளிவாக புலப்படுகிறது.

      முண்டகோபநிஷத் சொல்கிறது: நம் அனைத்திலும் ஆன்மாவாக ஒளி வீசி நிற்பது அனைத்திலும் அமைந்து விளங்கும் பிரும்மம் தான் .பிருமத்தினை பற்றி இந்த ஞானத்தை பெற்றவர்கள் பிரும்மமாகவே ஆகி விடுகின்றனர்.

      இதைத்தான் ஶ்ரீ வித்யா உபாசனையில் உபாசகன் தேவியாகவே ஆகி விடுகிறான். என்று சொல்லப்படுகிறது

      ஜபம் செய்து கொண்டிருந்தால் போதாது. இந்த ஜபம் எந்த ஜபத்தை பற்றி ச்செய்ய படுகிறதோ அப்போது அந்த தெயத்தை பற்றி நாம் அறிந்து கொண்டதெல்லாம் நம் மனதில் எழ வேண்டும். இறை பண்புகளை நினைக்கும்போதே இறைமையினை அநுபவித்ததாகிறது.

      ஸ்வேதாஸ்வர உபநிஷத் சொல்கிறது. நம் அகத்தில் ஒளிரும் ஆன்ம ஒளியினை பரத்தில் ஒளிரும் ப்ரும்ஹ ஒளியுடன் ஒன்றாக்க வேண்டும்.

      இதை எப்படி செய்வது. இவ்விரண்டும் ஒன்றே என்று எண்ண வேண்டும்.
      அந்த உணர்விலேயே அவை ஒன்றாகி விடுகின்றன.

      கண், காது முதலியவைகளின் மூலம் இன்பம் அனுபவிக்க ஆதாரமாக உள்ளது ஆன்மா. இந்த ஆன்மா இன்ப வடிவானது. இறைவனை தியானிக்கும் போது ஏற்படும் இன்பம் ஆன்மாவினால் தான் உணர முடியும்.

      ஆதி சங்கரரின் வேதாந்த பேரிகை முழங்குகிறது.: மனிதன் சரீரத்தினுடைய பஞ்சகரணங்கள் மூலம் எந்த ஆனந்தத்தை அநுபவிக்கிறானோ அந்த ஆனந்தமே ஆத்மா தான். இந்த ஆனந்தம் ஏற்பட சாந்தி ஏற்பட வேன்டும்.

      உண்மையான நிலையான பேரின்பமாகிய சத்சித் என்கின்ற ஆனந்தத்தை அளிக்கும் தாய் சாந்தி. இந்த சாந்தி இல்லாதவனுக்கு எங்கிருந்து சுகம் வரும் என்கிறார் கண்ணன் தன் கீதையில்.

      சாந்தி என்றால் மனம் சஞ்சலம் இல்லாமல் இருப்பது.. சலனுமமும் சாந்தியும் எதிர் மறைகள். இறைவனின் திருவருளும் குருவருளும் இரண்டும் இருந்து புலன் அடக்கமும் இருந்தால் சாந்தி நிலை ஏற்படும்.

      இதை ஆதி சங்கரர் ஸர்வ வேதாந்த சித்தாந்த சார சங்க்ரஹத்தில் கூறிஉள்ளார். இதையே திருவள்ளுவரும் இன்பத்துள் இன்பம் விழையான் தான் துன்பம் துன்பத்துள் வருதல் இலன். என்கிறார்.

      இங்கு துன்பம் என்பது நிம்மதியின்மை. ஊர் மேய்வது தான் உள்ளத்தின் பொல்லாத்தனம். உள்ளம் அடங்க அடங்க அமைதி ஏற்படுகிறது. ஆத்ம ஞான அடிபடையில் வரும் இன்பம் பேரின்பமாகும். இந்த பேரின்பத்தை அடையும் வழி குண்டலினி யோகமாகும்.

      தியானம்.
      ஒரு பொருளை முழுவதும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு ஆன்மாவை குரங்கு பிடியாக பிடித்து கொள்வதே தியானம். நாடி அச்சத்தால் தளரும் . கோபத்தால் முறுக்கேறும்.ஆசையினால் இஷ்டப்படி இயங்கும்.

      இதை வரைப் படுத்துவதே த்யானம். த்யானிக்கும் போது நினைப்பவன் ஒருவன். நினைவு ஒன்று. நினைக்கப்படும் பொருள் ஒன்று. த்யானத்தில் லயித்து ஒன்றுபடும் போது முதலில் நினைப்பதை மறக்கிறான். பிறகு நினை பொருள் மறக்கும். அதையும் அழித்து விட்டால் நிர் விகல்ப ஸமாதி ஆகிறான்..

      பதஞ்சலி முனிவர் மனித நிலையிலிருந்து தேவ நிலைக்கான படிகள் குறிப்பிட்டுள்ளார். அவையாவன: யமம்= தள்ளுபவை. நியமம்=கொள்ளுபவை; ஆசனம்= இருக்கை; பிராணாயாமம்=மூச்சுபயிர்ச்சி.

      ப்ரத்யாகாரம்=ஆற்றலை ஒன்றுபடுத்துவது. தாரணை=சக்திகளுக்கு வலிமை ஊட்டுவது. தியானம்=மனம் ஒன்றுபடல்; சமாதி= பேரின்பம் துய்த்தல்.

      இந்த அஷ்டாங்க யோகத்திற்கு உதவுவது மந்த்ரம், யந்திரம், தந்திரம்.
      அநுபவம், சூழ்நிலை, கல்வி இவற்றை அடிபடையாக கொண்டு மனம் ஒரு எல்லையுடன் கற்பனையில் வெகு தூரம் செல்லும். .

      இவற்றிலிருந்து விடுதலை பெற்று நிறை மனதாக விளங்க துணை செய்வது மந்திரம். யந்திரங்களில் எழுதப்படும் எழுத்து மந்திரம். மந்திரத்திற்கு உயிரூட்டும் முறையே தந்திரம்.

      ஏதோ ஒரு பொருளை அல்லது கருத்தை தொடர்ந்து த்யானிக்க பயின்றால்
      பாவனா சக்தி ஏற்படும். . பாவனா சக்தி பெற்று அதன் மூலம் சாந்தி பெற யோக சாஸ்திரத்தில் நான்கு வழிகள் உள்ளன.

      கருணா பாவம்: துன்புற்று பரிதாபமாக இருப்பவரிடம் பரிவும் இரக்கமும் காட்டி பழகுவது.
      மைத்ரீக பாவம்: மகிழ்ச்சியோடு தோழமை உணர்வோடு வளம் பெற்று த்ருப்தியாக வாழ்வது.


      முகிதா பாவம்: ஒழுக்கத்தால் சிறந்தவரோடு பழகுவது.
      உபேஷா பாவம்: தீச்செயலால் இழிந்த கயவர்களை வெறுக்காமல் வாழ்வது.

      இந்த பாவனைகளோடு பழகினால் சாந்தி ஏற்படுகிறது.

      மந்த்ர யோகம்=சிவ யோகம்: மோக்ஷார்த்தமாக ஏதோ ஒரு மந்திரத்தை எக்காலத்திலும் ஜபிப்பது. இந்த மந்திர அக்ஷரங்கள் ஒன்றோ, ஐந்தோ எட்டோ இருக்கலாம்.

      மூச்சு காற்று ஸ என்ற ஒலியுடன் நம் தேகத்தினுள் நுழைகிறது. ஹ என்ற ஒலியுடன் வெளிப்படுகிறது. இதையே குருவால் உபதேசிக்கப்பட்டு ஹம்ஸ மந்த்ர யோகமாக பழகலாம்.

      லய யோகம்: சித்தம் லயித்து இருப்பது. நாதத்தால், அல்லது வாக்குகளால், அல்லது த்யானத்தால். இந்த லய யோக பயிற்சியால் சித்தம் ஓய்வு பெறுகிறது .ஜீவாத்மா, பரமாத்மா ஐக்யம் ஏற்படுகிறது.

      ஹடயோகம்: ஹ=சூரியன்; ஸ= சந்திரன். இந்த சூர்ய சந்திரனின் சேர்க்கையே ஹட யோகம்.. ஹட யோகம் செய்வதால் உடலிலுள்ள எல்லா குற்றங்களும் , சோம்பலும் நீங்கும். பத்து வித முத்ரைகளினாலும், கரணங்களினாலும், கேவல கும்பகத்தினாலும், அஷ்டாங்க மார்கத்தினாலும் வாயுவை வசப்படுத்துவது ஹட யோகம். சுழுமுனையில் வழி ஏற்படுகிறது.

      ராஜ யோகம்; ஞானத்தால் மனோ விருத்திகள் இல்லாமல் இருப்பதேயாகும்.
      ஜீவர்களின் யோனி நடுவே செம்பருத்தி மலரின் நிறமுள்ள செந்நீர் உள்ளது.

      இது தேவி தத்துவம். புருவ மத்தியில் வெண்ணீர் உள்ளது. இது சிவ தத்துவம். இந்த வெண்ணிர், செந்நீரின் சேர்க்கையே ராஜ யோகம். இதனால் அஷ்ட மா சித்திகள் ஏற்படுகின்றன.

      இந் நான்கு யோகங்களும் ப்ராணன்,அபானன்களின் ஐக்கியம்.என்பதை அறிக.

      குண்டலினி சக்தியை விழிப்படைய செய்ய ஆற்றலுள்ளது ஹ்ரீம் என்ற புவனேசுவரி பீஜாக்ஷர மந்திரம்.. யோக முறை மூலம் தான் குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டும்.

      பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கருமையோ
      பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூர்னானந்த்மே என்கிறார்-தாயுமானவர். மனம் அகத்தில் ஸூக்ஷம்மாக இருப்ப்தால் “”அகம்””.
      உடலுக்குள்ளே இருந்து இயங்குவதால் உள்ளம்.. இதுவே அறிவுக்கு ஆதாரம்.
      .
      உணர்வுக்கு உறைவிடம். .இந்த உள்ளம் இல்லை என்றால் ஆய கலைகள், அறிவு நூல்கள். விஞ்ஞானம், ,ஞானம் எதுவும் தோன்றி யிருக்க முடியாது

      மனதின் வலிமைக்கு எல்லையே இல்லை. மனம் எவ்வளவுக்கு ஒரு வழிப்பட்டு நிற்கிறதோ அவ்வளவு வலிமையை ஒரு இடத்திலும் செலுத்தும்..

      உடல் சுகமாக இருந்தால் மனமும் சுகப்படும்.. உடலை பாதுகாத்து இந்திரியங்களை அடக்கினால் மனது வலுப்படும். .மிருகங்களை பழக்குவது போலிந்திரியங்களை பழக்கினால் பழக்கம் ஏற்படுமே தவிர குணம் மாறாது..

      எண்ணங்கள், உணர்ச்சிகள், வாசனைகள், பழக்கங்கள், ஸம்ஸ்காரங்கள் யாவும் நிறைந்ததே மனம். மனத்திற்கு தானே ப்ரகாசிக்கும் தன்மை இல்லை. ப்ரகாசம் ஆத்மாவிடமிருந்து பெறுகிறது. இந்த கடன் வாங்கிய ப்ரகாசத்தைக்கொண்டே எல்லா வஸ்துக்களையும் ப்ரகாசிக்க செய்கிறது.

      ஆத்ம ப்ரகாசம் இல்லையேல் உலக வஸ்துக்கள் நம் கண்ணுக்கு தெரியாது.
      மனதின் இயல்பு இந்திரியங்கள் வாயிலாக புறத்தே தென்படும் வஸ்துக்களை பற்றிகொண்டு அதன் வடிவங்களைப் பெறுவதே.

      மனம் இல்லாவிட்டால் இந்திரியங்கள் செயல் பட்டாலும் அவை உபயோகமற்றவையே.. ஜீவனும் அவ்வுணர்ச்சிகளை மனம் உதவியில்லாமல் உணர முடியாது.

      மனம் எதை விரும்புகிறதோ அதன் மயமாகிறது.. மனம் உலக பொருட்களை பற்றும்போது மனம் அசுத்தமடைகிறது. கடவுளை பற்றும் போது நிலைத்த இன்பத்தை அடைகிறது.

      மனம் தான் பந்தத்திற்கும் மோக்ஷதிற்கும் காராணம். மனம் ஆசைகள் நிறைந்தது இந்த மனமே உடல் முழுவதும் நிறைந்து அதற்கு உயிரை கொடுத்து இயக்கவும் செய்கிறது.

      ஆசைகள் அதிகரிப்பதால் தேவைகள் அதிகமாகிறது. இதனால் மனக்கஷ்டம். தேவைகளை குறைத்துக்க்கொண்டால் மனம் நிம்மதி யாகிறது.ஆசைகளை அடக்கினால் மனம் அடங்கும்.

      மனதின் நாட்டம் உலக பொருட்களில் குறைய குறைய மனதின் நாட்டம் ஆத்மனில் அதிக மாகிறது .மனம் ஒருமுக படும்போது ஆன்மீக பயிற்சிகள் வலுவடைகிறது/..

      உயிருக்கு உரம் கொடுப்பது உண்மை என்றால் என்றும் நிலைத்திருக்கும் தன்மை , இதுவே சத் எனப்படும். மண் பாண்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும் களிமண் ஒன்றே . நகைகள் பல விதம் ஆனால் தங்கம் ஒன்றே.

      இந்த ஜட தேகத்தால் மனதை அறிய முடியாது. மனதை மனதால் அறிய முடியும்.. . வ்யஷ்டி மனம் தான் ஜீவ ராசிகள். சமஷ்டி மனம் விரா என்றும், வைஸ்மாநரன் என்றும் சொல்வார்கள்.

      வெளி விஷயங்களிலிருந்து மனதை அடக்குவது “”சமம்”. அதே விஷயங்களிலிருந்து கண், காது முதலிய புலன்களை “தமம்” அடக்கப்பட்டு புலன்களை மறுபடியும் விஷயங்களில் செல்லாதப்படி தடுத்து நிறுத்துவது “உபாதி” இயற்கையாக ஏற்படும் குளிர், வெப்பம் முதலியவைகளால் ஏற்படும் இன்ப துன்பம் இவைகளை சகித்து கொள்வது “திதிக்ஷை” எனப்பெயர்.

      அறிவு மூளையை சேர்ந்தது அன்பும் அருளும் மனதை சேர்ந்த்து உலகில் பல இயக்கமுண்டு…இந்த இயக்கம் கடிகார பென்டுலம் போன்றது. நாடு, இனம், ஜாதி, சமயம்,. மொழி, நாகரீகம்,நிறம், கலை ,யாவும் கடிகாரத்தின் எண்கள்.

      அன்பும் அருளுமே சுழலும் இருமுள்கள். .

      மனம் என்ற விசையால் இயக்கம் என்ற பெண்டுலம் மிதமாக ஆட வேன்டும்.

      மணி ஓசையினால் இன்ப துன்பமுண்டு. பள்ளிக்கூட/ ஆலை ///மாணவர்கள்/ தொழிலாளிகளுக்கு துவக்க மணி துன்பம்/ வீடு செல்ல அடிக்கும் மணி இன்பம். ஒரே மணி, ஒரே ஓசை..ஆனால் அதை நோக்குவதில் மாறுதல்.

      தொடரும்

      Comment


      • #4
        Re: மனிதனின் கடன்கள்.

        மனது எந்தெந்த விஷயங்களில் செல்கிறதோ அந்த விஷயங்கள் நிரந்தர சுகத்தை கொடுக்காது. என்ற ஞானத்தாலும் அது துக்கமானது என்ற வைராக்யத்தாலும் அங்கிருந்து மனதை அகற்றி ஒரு நிலை படுத்தவேண்டும்.

        இது சிரமமான காரியம் தான்.முடியாததல்ல எப்போதும் மனதை அடக்கி ஆத்மாவிடம் நிலைக்கும் படி செய்யவேன்டும். இந்திரியம், மனது இவைகளை அடக்கி த்யானத்திலிருக்கும் போது மனம் அசையாது இருக்கும்.

        விஷய ஆசையை விட்டால் ரஜோ குணம் ஒழியும். ஆத்மாவிடம் மனதை செலுத்துவதால் ஜீவன் ப்ருஹ்ம ஸ்வரூபம் ஆகிறது. அப்போது பேரின்பம் தோன்றும்.

        தியானத்தில் மனதை நிலை நிறுத்தி , தன்னிடமுள்ள ஆத்மாவே ஸகல ப்ராணிகளிடத்திலும் இருக்கிறது என்று எண்ணுபவன் “சமதர்ஸி”. பகவான் கீதையில் எல்லா ப்ராணிகளிடமுள்ள என்னை யார் உபாகிக்றானோ , அவன் த்யானம் செய்தாலும் செய்யாமல் வேறு காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் என்னிடமே இருப்பவன் ஆகிறான் என்கிறார்.

        அந்தகரணம் என்றால் என்ன. அந்தர்=உள்ளே கரணம்=பொறி அறியும் கருவி.
        அறியும் சக்தி அறிவுக்கன்றி வேறு ஒன்றுக்கும் இல்லை. அறியும் அறிவுக்கு ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என்று சொல்லப்படும்.

        புறக்கருவிகள் பத்து இருப்பதால் அவையன்றி அவைகளுக்கெல்லாம் காரணமாகி அவன் எல்லாவற்றின் சக்தியும் தன்னில் அமைய பெற்றதாய்
        உள் முகத்தில் அறிய தக்க கருவி அந்தஹ்கரணம். வராஹ உபனிஷத் இது இந்திரியங்களுக்கு ராஜா என்கிறது.

        இந்த பத்து இந்திரியங்களையும் மனதையும் சேர்த்து சமஷ்டி பாவத்தில் “
        ஏகாதச ருத்திரர்கள்””என்பர். ருத்திரன் இங்கு காரணப்பெயர். இது ரோதனம், திராவனம் என்ற இரு சம்ஸ்க்ருத பதங்களின் அர்த்தத்தை சேர்த்து உணர்த்தும் வார்த்தை.. ரோதனம்= அழுதல்;; திராவனம்= ஓடுதல்.

        இது எப்போதும் நாம ரூபங்களை நாடி அழுது கொண்டே இருக்கும். மனிதனால் இந்த அழுகையையோ ஒட்டத்தையோ கட்டுபடுத்த முடியாது .ஓட விட்டே பிடிக்க வேண்டும் அழ விட்டே த்ருப்தி செய்ய வேண்டும்..

        சங்கற்ப விகற்பமான இந்த மனதிற்கு எதையும் பற்றவும் ,விடவும், பற்றி விடவும், விட்டு பிடிக்கவும் ,விட்டும் விடாது பற்றவும் விடாது விட்டு நிற்கவும் சக்தி உண்டு..

        இந்த சக்தி அதன் காரணமான ரஜோ, தமோ குணங்களினால் அதற்கு இயல்பாக அமைந்துள்ளது. இப்படி எல்லவற்றையும் பற்றி விடும் மனதை விடாது பற்றி நிற்பது. ஆதி எனப்படும் அந்தஹ்கரண வாசனை. இந்த வாசனை தான் ருத்திரன்.

        பிறந்ததும் அவனை அழுது கொண்டு ஓடும் படி செய்கிறது இந்த வாசனை பெருகும், மெலியும். .இது மனதுள்ள வரை யில் அதை பற்றாது விடுவதில்லை. மனதிற்கு பூ இடமாக இருப்பது போல் அந்தஅந்தகரண வாசனைக்கு அம்மனம் இருப்பிடம்..

        இந்த வாசனை மனது உதிக்கும் போது உதித்து அது லயிக்கும் போது தானும் லயித்து மறுபடியும் உதிக்கும் போது தானும் உதித்து அதை அழுது கொண்டே ஓடச்செய்யும். அது நுகர்வது எல்லாம். சிற்றின்பம்.

        பெருங்காய டப்பியில் பெருங்காயம் இல்லா விட்டாலும் அதன் வாசனை இருப்பது போல் மனம் செய்யும் கர்மம் அழிந்தும் அத்ன் வித்து வாசனை மாத்திரமாக இருந்து ,செய்த கர்மத்திற்கு தக்கபடி ஆதி என்கிற அந்த கரண வாசனை கால தேசத்திற்கு உட்பட்டு அந்தகரணத்தை செலுத்தும்..

        மனதை பற்றிய வாசனை எதுவோ அதற்கு மாயை என்றும், அவித்தை என்றும் சொல்வர்.

        இந்த மனத்தையும், அந்தகரணத்தையும் வென்றவர்கள் மகான்கள். என்பர்.
        மஹான்கள் செய்வது பற்றுதல் இல்லாமல் உலக உபகாரத்திற்காக இருக்கும்.

        செய்கையில் செய்கையின்மையும் செய்கையின்மையில் செய்கையும் கான்பவன் உத்தமன் என்கிறார் கிருஷ்ணர். சும்மா இருப்பதே சுகம் என்றும் இதை சொல்கிறார்கள் இதுவே நிஷ்டை,; சமாதி நிலை.

        புளியம்பழம் தான் ஓட்டில் ஒட்டிக்கொள்ளமல் அதனுள்ளே தனித்து நிற்பது போல் ஞானிகளுக்கு சரீர அபிமானம் இல்லாமல் சரீரத்துடன் இருப்பார்கள்.


        மனம் ஒன்றே,. கெட்ட வாசனையில் நிற்கும் போது கெட்ட மனம். நல்ல வாசனையில் நிற்கும் போது நல்ல மனம். மந்திர ஜபம், கடவுள் த்யானம், ஆகார நியமம். ப்ராணாயாமம் ஆகியவைகள் மனதை அடக்க உதவியாக இருக்கும்.

        சதா சலித்துகொண்டிருக்கும் மனதினிடம் ரூபத்தையும், நாமத்தையும் கொடுத்து அதை பற்றி கொள்ள செய்ய வேண்டும்.

        அளவற்ற நினைவுகளால் மனம் விரிந்தால் மனம் பலவீனமாகிறது. நினைவுகள் அடங்க அடங்க மனம் ஒரு நிலை தன்மை பெற்று பலமடைகிறது .மனம் பலம் பெற்றால் ஆத்ம விசாரம் பலமாகும்.

        சட்டமுனி சித்தர் மந்திர ஜபத்தால் மனதுடன் சம்பந்தபட்ட நாடிகள் நம்
        வசமாகிவிடும். இதனால் மனம் கட்டுபடும் என்கிறார்.

        ஒவ்வொரு அக்ஷரமும் உச்சரிக்கும் போது நாடிகளுக்கு வேலை ஏற்படுகிறது. மனதிற்கும் நாடிக்கும் சம்பந்தம் உண்டு. எந்தெந்த அக்ஷரங்களை உச்சரித்தால் எந்தெந்த நாடிகள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.


        நம் குணங்களுக்கும் நாடி நரம்புகளுக்கும் சம்பந்தம் உண்டு. சில நாடி நரம்புகள் அசைந்தால் சாந்தி நிலை ஏற்படுகிறது.

        மனம் சுவாதீனப்பட பகிரங்க சாதனம்: சிரத்தையோடு தானம், தர்மம், பரோபகாரம் செய்தல்..

        மனம் சுவாதீனப்பட அந்தரங்க சாதனம்: : அஹிம்சை.; மனம் பழுத்தால் அது தானே விழுந்து விடும். இதுவே முக்தி. இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவே நிற்பது மனம். இந்த மனம் நான்கு நிலைகள் கொண்டது.

        .புற மனம், நடு மனம், அடிமனம், செயலற்றிருக்கும் மனம்.

        மனம் புறத்தே சென்று சிற்றின்பங்களை நாடுவது புற மன வ்ருத்தி; மனம் உள்ளொடுங்கி ஆன்மாவில் லயித்திருப்பது நடு மன வ்ருத்தி. மனம் ஆன்மாவில் லயமாவது யோகம். இது அடிமன வ்ருத்தி.

        அறிய முடியாததை அறிந்து கொள்ளும் திறமை ஒருமுக பட்ட மனதிற்கு வருகிறது. இதுவே மனோதத்துவ ரகசியம்..

        ஜீவனை இயக்குவது மனம். இந்த மனம் பண்பட்டால் தான் உய்வு. மனத்தின் மூலம் ஒன்றை தானாக அறிய முடியும். பிறரால் அறிவது வாக்கு களால்.
        இந்த மனத்தால் ப்ருமத்தை அறிய முடியாது. பிருமத்திற்கு இந்த மனம் சரீரம் போன்றது. ப்ரும்மம் மனதின் உள்ளே இருந்து கொண்டு ஆள்கிறது.

        ஊஞ்சல் ஒரு பக்கம் எவ்வளவு தூரம் செல்கிறதோ அதே தூரம் மறுபக்கமும் ஆடியே தீரும். ஒரு பொருளின் மீது அதிக விருப்பம் கொண்டால் அப்பொருளை விட்டு பிரியும் போது அதே அள்வு துக்கம் ஏற்பட்டே தீரும். .மனத்தை ஊஞ்சலுடன் ஒப்பிடுவார்கள்.

        திருமூலர் மனதை மனதிற்குள் செலுத்த வேன்டுமென்கிறார். நாவுக்கரசர் இறைவன் மனதில் இருக்கிறார் என்கிறார். திருமூலரும் மனிதனின் மனதில் கடவுள் இருப்பதாக கூறுகிறார்.சிவ வாக்கியர் இதையே தான் கூறுகிறார்.

        நம் மனதிற்குள் வேறு யாரும் வந்து பார்ர்க்க முடியாது. நாமே பார்த்து ஆனந்திக்கலாம். யோகம், சித்த விருத்தியை கட்டுபடுத்தி அடக்கி ஆளும். சக்தி. உபாசனையால் இதை வளர்க்க வேண்டும்.

        எடுத்த எண்ணங்களை ஓய்வு பெற வைத்தால் சுகமுண்டாகிறது. எண்ண தோற்றமே துக்கம். எண்ணங்களின் ஒடுக்கமே சுகம். எண்ணங்களே சுகத்தின் சத்ரு. எண்ணங்கள் ஓய்ந்தால் சுகம். தானே தான் சுகம் என்பதை மனம் உணர்ந்தால் மனம் அடங்கும்.

        நான் என்கிற எண்ணமே எல்லா எண்ணங்களுக்கும் ஆணி வேர். “நான்””: என்கிற இந்த எண்ணத்தை அழித்தால் எல்லா எண்ணங்களையும் அழித்துவிடலாம். எண்ணங்களே மனம் என்கிறார் ரமணர்.

        தற்காலிகமாக மனம் ஒடுங்கினால் மனோலயம் என்று பெயர்..மனம் நாசமாவதால் ஒடுங்கும் நிலைக்கு மனோ நாசம் என்று பெயர்.

        மனதை ஒரு நிலை படுத்த : குளித்த பின் அல்லது கை கால்களை அலம்பிய பின் தினமும் ஒரே இடத்தில் பதிணைந்து நிமிடங்கள் மனதில் சொல்லிக்கொண்டே, கவனத்தை எழுத்தில் வைத்துகொண்டு உடல் நிலை மாற்றிக்கொள்ளாமல் ,

        ஒரு நாள் கூட எழுதுவதை நிருத்தாமல் , பிறருடன் பேசிக்கொண்டோ , மனது வெளியே ஓடாமல் ஒரு கடவுள் பெயரை மட்டுமே வேறு கடவுள் பெயர் மாற்றி கொள்ளாமல் தினமும் எழுதிக் கொண்டுவந்தால் மனம் அடங்கும்.

        அறிய முடியாதது ஒன்று உண்டு என்பதை உணர்வதே அறியாமை கடந்த அறிவு. . விஞ்ஞானி ஆராய்ச்சி செய்து பார்த்து நம்புகிறான். ஞானத்திற்கு நம்பிக்கை ஆதாரம். வேதங்களே ப்ரமாணம்.

        பச்சிளம் குழந்தை தாய் முகம் பார்த்து சிரிப்பது உணர்வு. அறிவு இல்லை. இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு என்பது அறிவு. உணர்வு இல்லை.

        அறிவும், உணர்வும் தனி தனி பண்புகள். அறிவை அடிபடையாக கொண்டது விஞ்ஞானம். உணர்வை அடிபடையாக கொண்டது ஆத்ம ஞானம்.

        புலன்கள் ஒரு அளவுக்குள் செயல் படுகிறது. அறிவும் ஒரு அளவுக்குள் செயல் படுகிறது.

        ஒன்றின் முழு தோற்றத்தையும் பார்த்து அதன் பூரண விஷயங்களை அறிவது ஞானம். ஐந்து பொறிகளுக்கும் புலனாவதை பற்றி ஆராய்ச்சி செய்கிறது விஞ்ஞானம். ஐந்து பொறிகளுக்கும் புலப்படாத இறைமையை பற்றியது மெய்ஞானம்..

        ஆதி சங்கர்ர் சொல்கிறார்.: மரணம் வந்து உண்ணை அழைக்கும்போது அதற்கான மெய்ஞானத்தை இப்போது பெற வழியை பார். இப்போது உன்னிடமுள்ள வேறு எதுவும் உன்னை காப்பாற்றாது.. மெய் ஞானத்தால் தான் அறிய முடியும் என்கிறார் தாயுமானவரும்.

        ஞானத்தை பெற உதவுவது விஞ்ஞானம். நமக்கு ஞானமும் வேன்டும். விஞ்ஞான்மும் வேண்டும்.. இரண்டுக்கும் உறவு உண்டு என் அன்றே விவேகானந்தர் விளக்கி உள்ளார். ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.

        நெருப்பு தொட்டால் சுடும். இது ஆராய்ச்சி அனுபவம். ஏன் சுடும் என்பதற்கு அறிவு பதில் சொல்ல முடியாது.. விஞ்ஞானி புறப்பொருளை துருவி பார்க்கிறான். மெய்ஞானி உட்பொருளை ஊடுருவி பார்க்கிறான்.

        முண்டகோபநிஷத் வாக்கியம் “’சத்ய மேவ ஜயதே என்கிறது. . உண்மையே. வேதாந்ததின் லக்ஷியம். விஞ்ஞானத்தின் லக்ஷியமும் உண்மை.

        ஆராய்வதர்குறிய விஷயம் அனுபவம் தான் , வேதாந்தமானாலும் விஞ்ஞானமானாலும்.. விஞ்ஞானம் புற பகுதியை ஆராய்கிறது.
        வேதாந்தம் அக பகுதியை ஆராய்கிறது .இந்த வேதாந்தமே ஞானம். . விசே.ஷ அறிவு என்பதே விஞ்ஞானம்.

        அறிவியல் ஆற்றல் தடைபட்ட நிலையில் ஆன்மவியல் தொடங்குகிறது.
        அறிவு கொண்டு காண முடியாததை உணர்வு கொண்டு காண வேண்டும்.

        .



        .

        Comment


        • #5
          Re: மனிதனின் கடன்கள்.

          மெய்ஞானமும் விஞ்ஞானமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை அறிவு பூர்வமாக ஆதரபூர்வமாக உதாரண்ங்களுடன் தெளிவுபட நிரூபித்துவிட்டீர்கள்.

          Comment

          Working...
          X