Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 082/100 விடை வெற்பில் நிற்பார் ப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 082/100 விடை வெற்பில் நிற்பார் ப

    3. அழகர் அந்தாதி - 082/100 விடை வெற்பில் நிற்பார் பணி செய்வது எஞ்ஞான்று ?

    நன்னுதலைப்பணி பூண் மார்பில் வைத்து விண் நாட்டு இருப்பார் ,
    மின்னுதலைப்பணி மேல் துயில்வார் விடை வெற்பில் நிற்பார் ,

    மன்னுதலைப்பணி அன்பரை வைக்கும் மலர் அடிக்கீழ்த்-
    துன்னுதலைப்பணி செய்வது எஞ்ஞான்று, என் துயர் தொலைந்தே

    பதவுரை :நல் + நுதலை + பணி (ஆபரணம்)
    மின்னு + தலை (சிரம்) + பணி (ஆதி சேஷன்)
    மன்னு + தலை (வைகுண்டம்) + பணி (வணங்கும்)
    துன்னு + தலை (சிறந்த) + பணி (தொண்டு)

    பணி பூண் மார்பில் ஆபரணங்களை தரிக்கும் திரு மார்பில்
    நல் நுதலை வைத்து அழகிய நெற்றியை உடைய திரு மகளை வைத்துக் கொண்டு
    விண் நாட்டு இருப்பார் பரம பதத்தில் வீற்றிருப்பவரும் (பரம்) ,
    மின்னு தலை மாணிக்கத்தால் மின்னும் தலையை உடைய
    பணி மேல் துயில்வார் ஆதி சேஷன் மேல் யோக நித்திரை செய்பவரும் (வியூஹம்) ,
    விடை வெற்பில் நிற்பார் ரிஷப கிரியில் நின்று இருப்பவருமான அழ்கரது (அர்ச்சை)
    பணி அன்பரை தம்மை வணங்கும் அன்பர்களை
    மன்னு தலை வைக்கும் உயர்ந்த ஸ்ரீ வைகுண்டத்தில் வைத்து அருளும்
    மலர் அடிக்கீழ் தாமரை போன்ற மலர் அடிகளின் கீழ்
    என் துயர் தொலைந்தே எனது துன்பங்கள் நீங்கி
    துன்னு தலைப் பணி செய்வது சிறந்த தலைமையான தொண்டுகள் செய்வது
    எஞ்ஞான்று என்னாளோ ?


    V.Sridhar

    Last edited by sridharv1946; 15-10-13, 21:07.
Working...
X