Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 087/100 சோலை மாமலை நம்பனையே பாடĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 087/100 சோலை மாமலை நம்பனையே பாடĬ

    3. அழகர் அந்தாதி - 087/100 சோலை மாமலை நம்பனையே பாடுமின் , பாவலர்காள் !

    புலமையிலே நிமிர்ந்து , அற்பரைப் போற்றி , பொது மகளை ,
    "குலமையிலே ! குயிலே ! கொடியே !" என்றும் , "கூர் விழி ஆம்
    பலவையிலே" என்றும் , பாடாமல் பாடுமின் , பாவலர்காள் !
    நலமையிலேய் முத்தம் ஆர் சோலை மாமலை நம்பனையே


    பதவுரை :குல + மையிலே
    பல + ஐயிலே
    நல் + அமையில் + ஏய்

    பாவலர்காள் கவி பாட வல்ல புலவர்காள் !
    புலமையிலே நிமிர்ந்து நீங்கள் கல்வியில் சிறந்து ,
    அற்பரைப் போற்றி ஆனால் இழிவான மனிதர்களைப் புகழ்ந்து
    பொது மகளை குணம் இல்லாத பெண்களை
    குலமையிலே ! குயிலே ! 'சிறந்த மயிலே ! குயிலே
    கொடியே ! என்றும் பூங்கொடியே' என்றும்
    கூர் விழி ஆம் பல ஐயிலே அவளது கூரிய கண்கள் 'வலிமையான வேலாயுதம்
    என்றும் பாடாமல் போன்றது ' என்றும் கவி பாடாமல்
    நல் அமையில் சிறந்த மூங்கில்களில் பொருந்திய
    ஏய் முத்தம் ஆர் சோலை மலையில் முத்துக்கள் நிறைந்த சோலை மலையில்
    நம்பனையே பாடுமின் இருக்கும் அழகனைப் பாடுங்கள் !

    --
    V.Sridhar

Working...
X