Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 095/100 அருளாளியைச் சேர்ந்தாரு&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 095/100 அருளாளியைச் சேர்ந்தாரு&

    3. அழகர் அந்தாதி - 095/100 அருளாளியைச் சேர்ந்தாருக்குத் தேவரும் நேர் அல்லரே !

    பாதகரத்தனை பேரும் கனகனும் பல் நகத்தா-
    லேதகரத்தனையற்கு அருளாளியை எட்டெழுத்துள்
    ஓதகரத்தனைச் சுந்தரத் தோளுடையானை நவ-
    நீதகரத்தனைச் சேர்ந்தாருக்குத் தேவரும் நேர் அல்லரே

    பதவுரை : பாதகர் + அத்தனை
    நகத்தாலே + தகர + தனையற்கு
    ஓது + அகரத்தனை
    நவநீத + கரத்தனை

    பாதகர் அத்தனை பேரும் கனகனும் தீ வினையுடைய அசுரர்களும் , ஹிரண்யனும்
    பல் நகத்தாலே தகர பல் , நகங்களால் பிளந்து அழிய
    தனையற்கு அருள் ஆளியை அவனது பிள்ளைக்கு அருளிய நரசிம்மனும் ,
    எட்டெழுத்துள் ஓது அகரத்தனை அஷ்டாக்ஷரத்துள் உள்ள அகார ரூபனும் ,
    சுந்தரத் தோளுடையானை அழகிய தோள்களை உடையவனும் ,
    நவநீதகரத்தனைவெண்ணெய் உள்ள கையை உடையவனுமான அழகனை
    சேர்ந்தார்க்கு சரணம் அடைந்தவர்களுக்கு
    தேவரும் நேர் அல்லரே தேவர்களும் ஒப்பு ஆக மாட்டார்

    --


    Last edited by sridharv1946; 20-10-13, 16:07.

  • #2
    Re: 3. அழகர் அந்தாதி - 095/100 அருளாளியைச் சேர்ந்தார&#30

    அமுத மழை சுந்தரத்தமிழ் படிக்கும்போது காதிற்கும் மனதிற்கும் தேன்மழை வள்ர்க நிம் தமிழ்த்தொண்டு

    Comment

    Working...
    X