Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 096/100 தொல்லலங்காரனை வணங்கு நெ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 096/100 தொல்லலங்காரனை வணங்கு நெ

    3. அழகர் அந்தாதி - 096/100 தொல்லலங்காரனை வணங்கு நெஞ்சே !

    அல்லலங்காரையும் சேர்விக்கும் ஐம்புல ஆசை என்றும்
    பல்லலங்கா நைந்து கோல் ஊன்றியும் பற்று அறாது கண்டாய்
    மல்லலங்காரிகையார் மருள் தீர்ந்து வணங்கு நெஞ்சே
    தொல்லலங்காரனைத் தென் திரு மால் இருஞ் சோலையிலே

    பதவுரை : அல்லல் + அங்கு + ஆரையும்
    பல் + அலங்கா
    மல்லல் + அம் + காரிகையார்
    தொல் + அலங்காரனை

    நெஞ்சே என் மனமே !
    ஆரையும் அல்லல் சேர்விக்கும் எவருக்கும் துன்பம் கொடுக்கும்
    ஐம்புல ஆசை ஐந்து புலன்களின் விருப்பங்கள்,
    பல் அலங்கா நைந்து பற்கள் அசைந்து , உடல் தளர்ந்து ,
    கோல் ஊன்றியும் கோலை ஊன்றும்படி ஆனாலும்
    என்றும்பற்று அறாதுஎந்நாளும் தொடர்ச்சி விடாது .
    மல்லல் அம் காரிகையார் மிக்க அழகுள்ள பெண்களிடம்
    மருள் தீர்ந்து ஏற்படும் மோஹம் நீங்கி
    தொல் அலங்காரனை அநாதியான அழகனை
    தென் திரு மால் இருஞ் சோலையிலே அழகிய திருமாலிருஞ்சோலையில்
    வணங்கு வணங்குவாய் !





    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 21-10-13, 11:41.
Working...
X