Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 098/100 சோலைக்கரும்புயலே ! அருளா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 098/100 சோலைக்கரும்புயலே ! அருளா

    3. அழகர் அந்தாதி - 098/100 சோலைக்கரும்புயலே ! அருளாய் உன் துளவினையே !

    மாலைக்கரும்பு சிறு கால் துகைக்க வருந்தும் எங்கள்
    ஆலைக்கரும்பு தன் ஆசை எல்லாம் சொல்லில் ஆயிரம் தோட்டு
    ஓலைக்கரும்புண் தொட முடம் ஆ மதி ஊர் குடுமிச்
    சோலைக்கரும்புயலே அருளாய் ! உன் துளவினையே


    பதவுரை : மாலைக்கு + அரும்பு
    ஆலை + கரும்பு
    ஓலைக்கு + அரும் + புண்
    சோலை + கரும் + புயலே


    தொட முடம் ஆ(க) தொட்டு உராய்வதால் அடி தேய்ந்திடுமாறு
    மதி ஊர் குடுமி சந்திரன் தவழ்ந்து செல்லும் உச்சியை உடைய
    சோலைக் கரும் புயலே திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கரிய மேகம் போன்றவனே !
    மாலைக்கு அரும்பு மாலை வேளைகளில் மந்தமாக வீசும்
    சிறு கால் துகைக்க வருந்தும் இளம் தென்றல் காற்று வருத்துவதால் வருந்தும்
    எங்கள் ஆலைக்கரும்பு ஆலையில் அகப்பட்ட கரும்பு போன்ற எங்கள் தலைவி
    தன் ஆசை எல்லாம் சொல்லில் தனது ஆசை முழுதும் சொல்லி அதை எழுதி வந்தால்
    ஆயிரம் தோட்டு ஓலைக்கு ஆயிரம் பனை ஓலைக்கு
    அரும் புண் அரிய புண் ஆகும் . ஆதலால் அதைத் தவிர்க்க அவளிடம்
    உன் துளவினையே அருளாய் ! நினது திருத் துழாய் மாலையை தந்து அருள்வாய் !







    --
    V.Sridhar



    Last edited by sridharv1946; 21-10-13, 13:40.
Working...
X