3. அழகர் அந்தாதி - 099/100 அலங்கார ! என்னை நீ கை விடேல் !
துளவிலையார் பொன் அடி முடி சூட்டி , தொண்டு ஆக்கி, என்னை
வளவிலையாக் கொண்ட நீ கை விடேல் - மங்கல குணங்கள்
அளவிலையா ! அலங்கார ! சமயிகள் ஆய்ந்த வண்ணம்
உளவிலையாய் , உரு ஆய் , அருவு ஆய ஒரு முதலே !
பதவுரை : துளவு + இலை + ஆர்
வள + விலையா
அளவு + இல் + ஐயா
உள + இல் + ஆய்
மங்கல குணங்கள் அளவு இல் ஐயா நற்குணங்கள் அளவின்றி பெற்ற ஸ்வாமி !
அலங்கார அழகனே !
சமயிகள் ஆய்ந்த வண்ணம் எல்லா சமயத்தவர்களும் ஆராய்ந்தபடி
உள இலை ஆய் உள்ளன என்றும் இல்லை என்றும் கூறப்படும் பொருள்களும் ,
உரு ஆய் , அருவு ஆய உருவப் பொருளும் அருவப் பொருளும் ஆன
ஒரு முதலே ஒப்பற்ற முதல் பொருளே !
துளவு இலை ஆர் பொன் அடி துளசி இதழ்கள் பொருந்திய உன் பொன்னான திருவடிகளை
முடி சூட்டி என் சிரத்தின் மீது வைத்து
என்னை தொண்டு ஆக்கி என்னை உனது அடிமையாக ஆக்கி
வளவிலையாக் கொண்ட நல்ல விற்பனைப் பொருளாக ஆக்கிய
நீ கை விடேல் நீ கை விடாதே
--
V.Sridhar
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks