Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 100/100 நிருபா ! உடன் இருந்து உவப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 100/100 நிருபா ! உடன் இருந்து உவப

    3. அழகர் அந்தாதி - 100/100 நிருபா ! உடன் இருந்து உவப்பது என்றோ ?

    ஒருபால் அமரர் , ஒரு பால் முனிவர் , உடன் இருந்து ,
    என்
    இருபார்வையும் கொண்டு உவப்பது என்றோ - இடபக் கிரிக்கும் ,
    பொருபாற் கடற்கும் , அயோத்திக்கும் , பொன் - துவரா பதிக்கும்
    நிருபா ! வைகுந்தமும் நீ வீற்றிருக்கின்ற நீர்மையுமே


    பதவுரை : ஒரு + பால்
    இரு + பார்வையும்
    பொரு + பால் + கடல்

    இடபக் கிரிக்கும் திரு மாலிருஞ்சோலை மலைக்கும் ,
    பொரு பாற் கடற்கும் அலைகள் மோதும் திருப்பாற்கடலுக்கும் ,
    அயோத்திக்கும் திரு அயோத்திக்கும் ,
    பொன் துவரா பதிக்கும் நிருபா அழகிய திருத் துவாரகைக்கும் தலைவா !
    வைகுந்தமும் ஸ்ரீ வைகுண்டத்தையும் ,
    நீ வீற்றிருக்கின்ற நீர்மையுமே அங்கு நீ இருக்கும் எளிமையான அழகையும்
    ஒருபால் அமரர் ஒரு பக்கம் நித்ய சூரிகளுடனும்
    ஒரு பால் முனிவர் , உடன் இருந்து ஒரு பக்கம் முக்தர்களுடனும் நான் கூடி இருந்து
    என் இருபார்வையும் கொண்டு எனது இரு கண்களாலும் சேவித்துப்
    உவப்பது என்றோ பரமானந்தம் அடைவது எப்போது ?
    --

    V.Sridhar


    Last edited by sridharv1946; 21-10-13, 21:17.
Working...
X