Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 002/108 குருகூரĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 002/108 குருகூரĮ

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 002/108குருகூர் நம்பித் திருத்தாள் இறைஞ்சு !

    பிறவாத பேறு பெறுதற்கு எஞ்ஞான்றும்
    மறவாது இறைஞ்சு என் மனனே - துறவாளன்
    வண் குருகூர் வாவி வழுதி வள நாடு உடைய
    தண் குருகூர் நம்பித் திருத்தாள்





    பத
    வுரை : குருகு + ஊர்
    குருகூர்

    என் மனனே என் மனமே !
    துறவாளன் பற்றற்றவரும் ,
    வண் குருகு ஊர் வாவி அழகிய நீர் வாழ பறவைகள் உலாவும் நீர் நிலைகள் சூழ்ந்த
    வழுதி வள நாடு உடைய பாண்டிய நாட்டில் உள்ள
    தண் குருகூர் நம்பி குளிர்ந்த திருக் குருகூரில் அவதரித்த பெரியவரான நம்மாழ்வாரின்
    திருத்தாள் திருவடிகளை
    பிறவாத பேறு பெறுதற்கு பிறவாமை எனும் பேறு அடைய
    எஞ்ஞான்றும் எப்பொழுதும்
    மறவாது இறைஞ்சு மறவாமல் வணங்குவாயாக !






    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 22-10-13, 19:16.
Working...
X