Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 004/108 கூரத்தாī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 004/108 கூரத்தாī


    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி
    004/108 கூரத்தாழ்வான் அடியை கூடுவது எக்காலம் ?

    முக்காலமில்லா முகில் வண்ணன் வைகுந்தத்து
    எக்காலம் செல்வான் இருக்கின்றேன் - தக்கார் எண்
    கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு நாய் அடியேன்
    போரத்தாழ்வான சடம் போட்டு

    பதவுரை : கூரத்து + ஆழ்வான்
    போர + தாழ்வான

    நாய் அடியேன் நாய் போல கடைப்பட்டவனான நான்
    போரத் தாழ்வு ஆன சடம் போட்டு மிக இழிவுடைய இவ்வுடலை இங்கு விட்டுவிடடு
    தக்கார் எண் கூரத்தாழ்வான் பெரியோர்களால் மதிக்கப்படும் கூரத்தாழ்வானுடைய
    அடியை கூடுதற்கு திருவடிகளைச் சேர்வதற்கு
    முக்காலம் இல்லா இறந்த , நிகழ் , எதிர் ஆகிய மூன்று காலங்களும் இல்லாத
    முகில் வண்ணன் வைகுந்தத்து கரிய நிறம் உடைய திருமாலின் ஸ்ரீ வைகுண்டத்தில்
    எக்காலம் செல்வான் இருக்கின்றேன் எந்நாளில் சென்று சேரப் போகின்றேன் ?

    V.Sridhar

    Last edited by sridharv1946; 22-10-13, 20:48.
Working...
X