Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 007/116 திரு அரங

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 007/116 திரு அரங

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 007/116 திரு அரங்கம் கோவில் சிறப்பு !

    1. சோழ நாட்டுத் திருப்பதி - 1/40

    சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது , என்
    சோர்வந்த சொல்லில் சுருங்குமோ - ஆர்வம்
    ஒருவர் அங்கு அங்கு ஓயில் , உகந்து அவரை ஆள்வான்
    திரு அரங்கம் கோவில் சிறப்பு


    பதவுரை :


    ஒருவர் அங்கு அங்கு ஆர்வம் ஓயில் ஒருவர் அந்தந்த விஷயங்களில் ஆசைஒழித்தால் ,
    அவரை உகந்து ஆள்வான் அவரை விரும்பி அடிமை கொள்பவனான எம்பெருமானின்
    திரு அரங்கம் கோவில் சிறப்பு திருவரங்கம் பெரிய கோயிலின் பெருமையானது
    சீர் வந்த உந்தி சிறப்புள்ள திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த
    திசை முகனால் அல்லாது நான்கு திசைகள் நோக்கும் நான்முகன் இல்லாமல்
    என் சோர்வந்த சொல்லில் எனது குற்றம் பொருந்திய சொற்களில்
    சுருங்குமோ அடங்குமோ ? (அடங்காது)

    V.Sridhar

    Last edited by sridharv1946; 23-10-13, 20:53.
Working...
X