Announcement

Collapse
No announcement yet.

GANGA ASHTAKAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • GANGA ASHTAKAM

    I have come across Ganga Ashtakam from Kamakoti.org web site. As Deepavali is fast approaching, I thought giving this to our members will be a Deepavali gift from me. Let us chant this Ganga Ashtakam on Deepavali day and Get all the Divine Blessings. Hope members welcome this.

    With Best Regards

    S. Sankara Narayanan



    கங்காஷ்டகம்

    1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-
    கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!
    அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
    விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!
    பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ, தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

    2.ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
    ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!
    க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
    பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!
    ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

    3.மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்
    ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி
    ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்
    பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் II
    யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது. குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது. காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை, புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

    4.ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்
    பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!
    பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்
    கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் !!
    முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

    5.சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I
    பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I
    சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ
    காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி
    காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது. அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

    6.குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்
    த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!
    த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்
    ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!
    ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது. சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய். உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

    7.பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்
    விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !
    ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே
    தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!
    ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

    8.மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்
    த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !
    ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
    பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!
    கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன். உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம். அப்பொழுது ஹரியும்,
    ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

    9.கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி
    ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி !!
    புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர். கங்காஷ்டகம் முற்றிற்று.
    RADHE KRISHNA

  • #2
    Re: GANGA ASHTAKAM

    Kasi Panchagam

    Mano Nivruththi: Paramobasaanthi: Saadheerththavaryaa Mannikarnnikaacha
    Thaana Pravaahaa Vimalaathi Gangaa Saa Kaasikaaham Nijapaatharoopa

    Yasyaamitham Kalpithamindhra Jaalam Charaacharam Paathimanoovilaasam
    Sachith Sookaikaa Paramaathma Roopaa Saa Kaasikaaham||

    Kocheeshu Panchasvathi Raajamaanaa Budhdhir Bavaani Prathithehakeeham
    Saakshi Siva: sarvagathoo Antharaathmaa saa kaasikaaham||

    Karsayaam hi Kaachathee Kaasi Kaasi Sarvaprahaasikaa
    Saa Kaasee Vidhidhaa Theena Praapthaahi Kaasikaa||

    Kaasi Kshethram Sareeram Thrupuvana Jananee Vyaapinee Gjnana Gangaam
    Bakthi: Sraththa kayeeyam Nijaguru Charana Dhyaana yoga: Prayaaha:||

    Visveechoo Aayam SakalaJanamana: SaakshiBoothoo Anthraathmaa
    Dheehee Sarvam Madheeyee Yathi Vasathi Punastheertha Manyath Kimasthi||

    - Aadhi Shankarar

    Comment

    Working...
    X