Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 017/116 சிறுபுல

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 017/116 சிறுபுல

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 017/116 சிறுபுலியூர் எந்தை எதிர் ஆர் நிற்பார் ?

    திருப்பதி - 11/108. சோழ நாடு - 11/40 : திருச்சிறு புலியூர்

    ஆமருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார் -
    தாமருவி வாணனைத் தோள் சாய்த்த நாள், சேமம்
    உறுபுலியூர் வன்தோல் உடையான் உடைந்தான் ,
    சிறுபுலியூர் எந்தை மேல் சென்று

    பதவுரை : ஆ + மருவி
    தாம் + மருவி
    உறு + புலி + ஊர்

    தாம் திரு அரங்கநாதர்

    வாணனை மருவி பாணாசுரன் அருகில் சென்று

    தோள் சாய்த்த நாள் அவனது தோள்களை அறுத்துத் தள்ளிய அந்த காலத்தில்

    சேமம் உறு அவனுக்குப் காவலாக நின்ற

    புலி ஊர் வன் தோல் உடையான் புலியின் வலிய தோலை ஆடையாக உடைய சிவன்

    சிறுபுலியூர் எந்தை மேல் சென்று சிறுபுலியூரில் இருக்கும் எம்பெருமானை எதிர்த்து

    உடைந்தான் தோற்று ஓடினான்

    ஆமருவி மேய்த்த பசுக்களை விரும்பி மேய்த்த

    அரங்கர் எதிர் ஆர் நிற்பார் ஸ்ரீ ரங்க நாதருக்கு முன்பு எவர் எதிர்த்து நிற்க வல்லவர் ?


    V.Sridhar
    Last edited by sridharv1946; 25-10-13, 21:12.
Working...
X