Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 018/116 பேறு ஆகச&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 018/116 பேறு ஆகச&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 018/116 பேறு ஆகச் சேறைக்கு நாயகன் பேர் செப்பு !

    திருப்பதி -
    12/108. சோழ நாடு - 12/40 : திருச்சேறை


    சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்
    நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே ! இன் தமிழைக்-
    கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே , பேறு ஆகச்-
    சேறைக்கு நாயகன் பேர் செப்பு


    பதவுரை :



    செல்வம் செருக்குவார் செல்வத்தினால் கர்வம் அடைந்தவர்களை

    வாயில் தொறும் சென்று சென்று வீட்டு வாசல் தோறும் போய்ப் போய்

    நின்று நின்று அங்கே நெடு நேரம் நின்று

    தூங்கும் மட நெஞ்சமே சோர்ந்து போகும் அறியாமை உடைய என் மனமே !

    இன் தமிழை இனிய தமிழ்ப் பாடல்களை

    கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே துணிக்காகவும் , உணவுக்காகவும் மனிதனைப் பாடாமல்

    பேறு ஆக முக்தி கிடைக்கும்படி \

    சேறைக்கு நாயகன் பேர் செப்பு
    திருச்சேறை நாதனைப் பாடுவாயாக !




    --
    V.Sridhar
Working...
X