Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 020/116 உலகைப் ப&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 020/116 உலகைப் ப&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 020/116 உலகைப் படைத்து , பாதுகாத்து , அழித்தவன் நீயே !

    திருப்பதி - 14/108. சோழ நாடு - 14/40 : திருக் குடந்தை

    தானே படைத்து , உலகைத் தானே அளித்து , நீ
    தானே அழிக்கும் தளர்ச்சியோ ? - வானில்
    திரு மகுடம் தைக்கச் சிறு குறளாய் நீண்ட
    பெரும ! குடந்தைக் கிடந்தாய் பேசு


    சிறு குறளாய் சிறிய வாமன அவதாரம் ஆகி ,
    வானில் திரு மகுடம் தைக்க பிறகு வானத்தில் திரு மகுடம் முட்டும்படி
    நீண்ட பெரும நீண்டு வளர்ந்து அருளிய பெருமானே !
    நீ தானே படைத்து பிரமன் ஆகி நீயே உலகத்தைப் படைத்து ,
    தானே உலகை அளித்து நீ விஷ்ணு ஆகி உலகைப் பாதுகாத்து
    தானே அழிக்கும் நீ சிவன் ஆகி உலகை அழித்ததனால்
    தளர்ச்சியோ ஏற்பட்ட இளைப்பினால்
    குடந்தைக் கிடந்தாய் குடந்தையில் பள்ளி கொண்டாயோ ?

    பேசு கூறுவாயாக !



    --

    V.Sridhar
Working...
X